மேலும் அறிய

டார்கெட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. அலுவலகத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மர்ம நபர்கள்..! நடந்தது என்ன?

இன்னும், கொலைகாரர்கள் இருவரும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் நடந்த உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள சுரேந்திர மதியாலா மர்ம நபர்கள் இருவரால் அவரின் அலுவலகத்திலேயே சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டார்கெட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி:

சம்பவத்தை விவரித்த காவல்துறை தரப்பு, "மதியாலாவும் அவரது மருமகனும் இரவு 7:30 மணியளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​முகத்தை மூடிக்கொண்டு இரண்டு பேர், துவாரகாவில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் நுழைந்தனர். மதியாலாவை சரமாரியாக தாக்கினர். பின்னர்,  நான்கு முதல் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டனர். 

இன்னும், கொலைகாரர்கள் இருவரும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் நடந்த உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மொத்தம் மூன்று பேர். மதியாலாவைக் கொல்ல இருவர் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, ​​ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கட்டிடத்திற்கு வெளியே காத்திருந்தார்.

குற்றத்தை செய்த பின்னர், மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர்" என தெரிவித்தது. இதுகுறித்து மதியாலாவின் மகன் கூறுகையில், "தந்தைக்கு யாருடனும் பகை இல்லை. கொலையில் ஈடுபட்டவர்களை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

 துப்பாக்கியால் சுட்டு கொலை:

மதியாலா கொலை வழக்கில் யார் மீதும் சந்தேகம் இல்லை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட விதம், அவரது கொலைக்குப் பின்னால் தனிப்பட்ட பழிவாங்கல் இருக்கலாம் என்று காவல்துறை நம்புவதற்கு வழிவகுத்துள்ளது. மதியாலாவுக்கு சிலருடன் சொத்து தகராறு இருந்ததாகவும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து துவாரகா துணை போலீஸ் கமிஷனர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், "கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூவரை கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்துள்ளது. குற்றம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் தடயங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

குற்றங்கள் அதிகரிப்பு:

சமீப காலமாகவே, டெல்லியில் வன்முறை செயல்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்க காலமான 2020ஆம் ஆண்டில், கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, கடந்த 2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த குற்றங்களை 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அது 28% அதிகரித்துள்ளது. அதாவது 2019ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில், 386 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020ல் இந்த எண்ணிக்கை 488 என அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 66,46,285. இதில் இந்திய தண்டனை சட்டப்பிரிவான ஐ.பி.சி.யின் கீழ் 42,54,356 குற்றங்களும், மாநில குற்ற தடுப்பு சட்டத்தின்  கீழ் 23,46,929 குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget