மேலும் அறிய

Dais Suspension | சினிமா ஸ்டைலில் மேடையிலேயே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த முதல்வர்! என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுஹான் இரண்டு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளார். அதுவும் அரசு நிகழ்ச்சிக்காக விழா மேடையில் இருந்தவாறே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும், ஒரு நாள் முதல்வர் அர்ஜூன் மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் ஆக்‌ஷனில் இறங்கி சஸ்பெண்ட் ஆர்டர்களைப் பறக்கவிடுவார். அப்படியொரு சம்பவத்தை ஒரு முதல்வர் நிஜமாகவே செய்துள்ளார். ஆம், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுஹான் தான் திரைப்பட பாணியில் இரண்டு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளார். அதுவும் அரசு நிகழ்ச்சிக்காக விழா மேடையில் இருந்தவாறே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதில் கூறப்பட்ட ஊழல் குற்றசாட்டுகளுக்காக இரண்டு அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், நகர்ப்புற ஏழை மக்களுக்காக இரண்டு கோடி வீடுகளை மார்ச் 2022-க்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள், ரூ.9 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். மேலும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் ரூ.12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம்.

ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நாடு முழுவதுமே அவ்வப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் அம்பலமாகி வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்திலும் பிராதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் இப்படியொரு ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது


Dais Suspension | சினிமா ஸ்டைலில் மேடையிலேயே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த முதல்வர்! என்ன நடந்தது?

இந்நிலையில் நிவாரியில் முதல்வர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பொதுமக்களை நோக்கி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் எதேனும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாகத் தெரிந்தால் என்னிடம் தெரிவியுங்கள் என்றார். அப்போது கூட்டத்திலிருந்து உமா சங்கர், அபிஷேக் ரவுத் என்ற இரண்டு பெயர்கள் கோஷமாக உச்சரிக்கப்பட்டது. உமா சங்கர் தலைமை முனிசிபல் அலுவலராக இருந்தார். அபிஷே ரவுத் பொறியாளர். இந்த இருவருமே பிஎம்ஏஒய் திட்டத்தில் அதிகளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாக மக்கள் கூறியதால் சிவராஜ் சவுஹான் அவர்களை விழா மேடையில் இருந்தவாறே சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

மேலும் பொருளாதார குற்றவியல் பிரிவு இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார். ஊழலில் ஈடுபட்டவர்கள் சிறை செல்வது உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மத்தியப் பிரதேசத்தின் பிரித்விபூர் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக ஜன்தர்ஷன் யாத்திரா என்ற பேரணியை முதல்வர் ஒருங்கிணைத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகாவே நிவாரிக்கு முதல்வர் சென்றிருந்தார். நிவாரி, திகாம்கர் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.

ஒர்சாவில் கல்லூரி கட்டுவதற்காக அவர் அடிக்கல் நாட்டினார். அதேபோல் மோகன்கர் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். ரூ.2 கோடியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். பிரித்விபூரின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரிஜேந்திர சிங் ரத்தோர் மறைந்ததையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Embed widget