மேலும் அறிய

Marital Rape : No means No...மனைவி நோ சொன்னால்...கணவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்து கொள்வதை குற்றமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருமண உறவில் மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்து கொள்வதை குற்றமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் இதேபோன்ற பல மனுக்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு ஒன்றாக பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மனைவியின் ஒப்புதல் இன்றி அவருடன் பாலியல் உறவு வைத்து கொண்டால் கணவருக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது, ​​அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் கருணா நுண்டி ஆஜரானார். அப்போது, சட்டத்தில் அடிப்படையான கேள்வியை இந்த வழக்கு எழுப்பியுள்ளது என்றும் இதன் காரணமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பே தேவைப்படுகிறது என்றும் இரண்டு நீதிபதிகளும் கருத்து தெரிவித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, திருமண உறவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டால் அது குற்றமாக கருதப்படுவதில்லை. அதற்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு குறித்து இந்த வழக்கு ஆராய்கிறது. திருமணமான பெண், தனது கணவரிடம் பாலியல் உறவை மறுக்க முடியுமா அப்படி, அதையும் மீறி பாலியல் உறவு வைத்து கொண்டால் அது பாலியல் வன்கொடுமையாக கருத முடியுமா என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது.

மே மாதம், இந்த வழக்கில் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதியான ராஜீவ் ஷக்தேர், திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி, தண்டனையிலிருந்து அதற்கு அளிக்கப்படும் விலக்கை ரத்து செய்ய அவர் பரிந்துரைத்திருந்தார். இந்திய தண்டனை சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி கேட்டு வரும் திருமணமான பெண்ணின் குரலை கேட்க மறுப்பது துயரமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், அமர்வில் இடம்பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான சி. ஹரி சங்கர், இதற்கு உடன்பட மறுத்து, நியாயமான வேறுபாட்டின் அடிப்படையிலேயே திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கு விலக்கு அளிக்கப்பட்டது என கருத்து தெரிவித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs GT: குஜராத்தை குமுறிய ராஜஸ்தான், சூர்யவன்ஷியின் அடுக்கடுக்கான சாதனைகள் - குஷியில் மும்பை பல்தான்ஸ்
RR Vs GT: குஜராத்தை குமுறிய ராஜஸ்தான், சூர்யவன்ஷியின் அடுக்கடுக்கான சாதனைகள் - குஷியில் மும்பை பல்தான்ஸ்
TN Cabinet Reshuffle: முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
TN Cabinet Reshuffle: முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs GT: குஜராத்தை குமுறிய ராஜஸ்தான், சூர்யவன்ஷியின் அடுக்கடுக்கான சாதனைகள் - குஷியில் மும்பை பல்தான்ஸ்
RR Vs GT: குஜராத்தை குமுறிய ராஜஸ்தான், சூர்யவன்ஷியின் அடுக்கடுக்கான சாதனைகள் - குஷியில் மும்பை பல்தான்ஸ்
TN Cabinet Reshuffle: முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
TN Cabinet Reshuffle: முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவர்களின் நோக்கம் இதுதான்! – மீண்டும் விஜய் ஆண்டனி வெளியிட்டப் பதிவு
தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவர்களின் நோக்கம் இதுதான்! – மீண்டும் விஜய் ஆண்டனி வெளியிட்டப் பதிவு
Embed widget