மேலும் அறிய

Marital Rape : No means No...மனைவி நோ சொன்னால்...கணவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்து கொள்வதை குற்றமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருமண உறவில் மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்து கொள்வதை குற்றமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் இதேபோன்ற பல மனுக்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு ஒன்றாக பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மனைவியின் ஒப்புதல் இன்றி அவருடன் பாலியல் உறவு வைத்து கொண்டால் கணவருக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது, ​​அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் கருணா நுண்டி ஆஜரானார். அப்போது, சட்டத்தில் அடிப்படையான கேள்வியை இந்த வழக்கு எழுப்பியுள்ளது என்றும் இதன் காரணமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பே தேவைப்படுகிறது என்றும் இரண்டு நீதிபதிகளும் கருத்து தெரிவித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, திருமண உறவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டால் அது குற்றமாக கருதப்படுவதில்லை. அதற்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு குறித்து இந்த வழக்கு ஆராய்கிறது. திருமணமான பெண், தனது கணவரிடம் பாலியல் உறவை மறுக்க முடியுமா அப்படி, அதையும் மீறி பாலியல் உறவு வைத்து கொண்டால் அது பாலியல் வன்கொடுமையாக கருத முடியுமா என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது.

மே மாதம், இந்த வழக்கில் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதியான ராஜீவ் ஷக்தேர், திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி, தண்டனையிலிருந்து அதற்கு அளிக்கப்படும் விலக்கை ரத்து செய்ய அவர் பரிந்துரைத்திருந்தார். இந்திய தண்டனை சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி கேட்டு வரும் திருமணமான பெண்ணின் குரலை கேட்க மறுப்பது துயரமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், அமர்வில் இடம்பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான சி. ஹரி சங்கர், இதற்கு உடன்பட மறுத்து, நியாயமான வேறுபாட்டின் அடிப்படையிலேயே திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கு விலக்கு அளிக்கப்பட்டது என கருத்து தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget