மேலும் அறிய

Coronavirus Cases India | ஒருபக்கம் கொரோனா அதிகரித்தாலும் மறுபக்கம் மீளும் இந்தியா: துளிர்க்கும் நம்பிக்கை!

கொரோனா தீவிரமாக பரவி வரும் அதே வேளையில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை  ஆறுதல் அளிக்கிறது. 

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 


Coronavirus Cases India | ஒருபக்கம் கொரோனா அதிகரித்தாலும் மறுபக்கம் மீளும் இந்தியா: துளிர்க்கும் நம்பிக்கை!

பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தீவிர பரவல் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தீவிரமாக பரவி வரும் அதேவேளையில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை  ஆறுதல் அளிக்கிறது. 

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவில் 2,10,77,410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3980 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழப்பு 23 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம் கொரோனா அதிவேகமாக அதிகரித்தாலும், மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நம்பிக்கையை விதைத்துள்ளது. 



Coronavirus Cases India | ஒருபக்கம் கொரோனா அதிகரித்தாலும் மறுபக்கம் மீளும் இந்தியா: துளிர்க்கும் நம்பிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் 3,29,113 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் குணமானவர்களின் சதவீதம் 81.99%ஆக உள்ளது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஆனாலும் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 85.3ஆக உள்ளது. நேற்று மட்டும் 57,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசமும் குணமடைபவர்களின் எண்ணிக்கையில் சீராகவே உள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 80.2%ஆக உள்ளது. மொத்தமாக உபியில் 11,22,669 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். டெல்லியை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 19,209 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக 11,43,980 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்திய தலைநகரை பொருத்தவரை கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் 91.2 ஆக உள்ளது.


Coronavirus Cases India | ஒருபக்கம் கொரோனா அதிகரித்தாலும் மறுபக்கம் மீளும் இந்தியா: துளிர்க்கும் நம்பிக்கை!

மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழகம் போன்ற பெரிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், உயிரிழப்பு அதிகரித்து வருவதும் தொடர்ந்து வருவதால், இந்தியாவில் திரும்பும் நம்பிக்கை சூழல், மாநில அளவில் தமிழகத்திலும் திரும்ப வேண்டும். முறையான கட்டுப்பாடுகளை பின்பற்றி தமிழக மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TRB Rajaa slams Annamalai : ”நான் என்ன ஈசலா? அண்ணாமலையை விளாசும் TRB ராஜாGaneshamurthi Death : ஈரோடு மதிமுக MP கணேசமூர்த்தி காலமானார்SP Velumani : ”அ.மலை பத்தி கவலை இல்லபாஜக கணக்குலயே இல்ல” SP வேலுமணி ஆவேசம்Annamalai Asset : 51 ஏக்கர் நிலம்! அண்ணாமலை சொத்து பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Breaking News LIVE : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிப்பு..!
Breaking News LIVE : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிப்பு..!
Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
Election King: 238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் 'எலெக்சன் கிங்'  - யார் இந்த பத்மராஜன்?
238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் 'எலெக்சன் கிங்' - யார் இந்த பத்மராஜன்?
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Embed widget