மேலும் அறிய

Black Fungus Threat: மஹாராஷ்ட்ரா, டெல்லிக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்: குறையும் கொரோனா, கூடும் பூஞ்சைத்தொற்று பாதிப்புகள்

வழக்கமாக, சர்க்கரை நோய், ஸ்டீராய்டு மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டவர்களிடம் பூஞ்சை பாதிப்பு இருக்கும், ஆனால் இந்த அளவு பாதிப்பை நான் பார்த்ததே இல்லை என்கிறார் பத்மா ஸ்ரீவத்சவா

கொரோனாவிலிருந்து டெல்லி, மஹாராஷ்ட்ரா இரண்டுமே மீண்டுவருவது சற்றே ஆறுதலாக இருந்தாலும், அதிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்தபடி இருக்கிறது. கொரோனா முதல் அலையின்போதே தொற்றிலிருந்து மீண்டவர்களை அரிதான கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருந்தது. இப்போதைய இரண்டாம் அலையில் அதன் பாதிப்பு கூடுதலாகவும் அதிக இடங்களிலும் கண்டறியப்படுகிறது. நாட்டின் வடக்கு, வடமேற்கு மாநிலங்களில் மியூகர்மைக்கோசிஸ் எனப்படும் இந்த கரும்பூஞ்சை தாக்குதலால் நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

தலைநகர் டெல்லியில் அன்றாடம் கிட்டத்தட்ட 100 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கின்றனர் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்- எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று 20 பேருக்கும் மேல்  கருப்பு பூஞ்சை பாதிப்படைந்தவர்கள் சேர்ந்துள்ளனர் என்று அதன் நரம்பியல் துறை தலைவர் பத்மா ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். வழக்கமாக, சர்க்கரை நோய், ஸ்டீராய்டு மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டவர்களிடம் இந்த பாதிப்பு இருக்கும் என்றாலும் இந்த அளவு பாதிப்பை நான் பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறினார். ஒற்றை இலக்கத்தில் இருந்துவந்த பாதிப்பு இரட்டை இலக்கத்துக்கு வந்தது; இப்போது நகரில் அது 100-ஐக் கடந்துவிட்டது; எனவே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டுகளை அமைத்திருக்கிறோம் என்றும் பத்மா தெரிவித்தார்.

டெல்லியின் மேக்ஸ் மருத்துவமனையில் கரும்பூஞ்சை சிகிச்சைக்காக நேற்று 25 பேர் சேர்ந்துள்ளனர். கங்காராம் மருத்துவமனையில் 48 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 16 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் அதன் தலைவர் மருத்துவர் டி.எஸ்.ராணா தெரிவித்தார். ஹரியானா மாநிலத்தில் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். இதற்காக மட்டும் மருத்துவக்கல்லூரிகளில் தலா 20 படுக்கைகளை அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் பெங்களூருவில் மட்டும் 75 பேர் பூஞ்சைத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆறு பேர் மைசூரு மருத்துவமனையிலும் ஒருவர் பெலகாவியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 97 பேர் இந்த பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த பூஞ்சைத் தொற்று பாதிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னரே குஜராத், மஹாராஷ்ட்ர மாநிலங்களில் தொடங்கியது. மூன்று வாரங்களாக குஜராத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் குஜராத்தின் சூரத் நகரில் கரும்பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, புனே ஆகிய நகரங்களிலும் முதல் கட்டமாகவும் அடுத்து தானேவிலும்  பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது 17 மாவட்டங்கள்வரை பாதிப்பு இருக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஸ் தோபே கூறியுள்ளார். ஒரு வாரத்துக்கு முன்னரே அங்கு 2 ஆயிரம் பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு இருக்கக்கூடும் என அவர் கூறினார். அது வேகமாக அதிகரித்து ஒரு வாரத்தில் மேலும் 500 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நேற்று அவரே கூறியுள்ளார். மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் இதுவரை 90 பேர் கரும்பூஞ்சைத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது 100 பேர் இந்த பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் மாநில அரசு தனி வார்டை அமைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், லக்னோ, கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் நேற்றுவரை 50 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சேர்ந்தவர்கள் 9 பேர். இதுவரை ஆறு பேருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது; அதில் ஒருவர் குணமாகி வீடுதிரும்பியுள்ளார்; நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்தியப்பிரதேசத்தில் இந்தப் பிரச்னையை முன்கூட்டியே அறிந்து தடுக்கும்வகையில், மூக்குவழியான உள்நோக்கி கண்டறிதல் சோதனையை அரசு முன்னெடுத்துள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் இந்த சோதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget