மேலும் அறிய

Ayodhya Mosque : 100 படுக்கைகள்.. 1000 பேருக்கு உணவு.. அயோத்தி மசூதி.. அறக்கட்டளை வெளியிட்ட முக்கிய தகவல் என்ன தெரியுமா?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியை கட்டுவதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ள அறக்கட்டளை இது தொடர்பான தகவலை பகிர்ந்துள்ளது.

இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "மசூதி, மருத்துவமனை, சமூக சமையலறை, நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் வரைபடத்திற்கு இம்மாத இறுதிக்குள் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.

விரைவில் மசூதி கட்டும் பணியை தொடங்குவோம். தன்னிப்பூர் அயோத்தி மசூதியின் கட்டுமானப் பணிகள் 2023 டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும். அதே போல, ஐந்து ஏக்கர் மௌலவி அகமதுல்லா ஷா வளாகத்தில் மேல் உள்ள கட்டமைப்புகள் பின்னர் கட்டப்படும்" என்றார்.

நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த அயோத்தி வழக்கில், பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், உத்தரப் பிரதேசத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆகஸ்ட் 2020இல், கோயிலின் பூமி பூஜை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்டது. மேலும், ஜனவரி 2024இல் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்படும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கோயில் மற்றும் மசூதி கட்டி முடிக்கப்படும் நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மசூதி கட்டுவதற்காக உத்தரபிரதேச சன்னி மத்திய வக்பு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை, மருத்துவமனை, சமூக சமையலறை, நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றைக் கட்ட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறுகையில், "முன்மொழியப்பட்ட கட்டமைப்புகளின் கட்டுமானத்தை அறக்கட்டளை ஒரே நேரத்தில் தொடங்கும். மசூதி அதன் சிறிய அளவு காரணமாக முதலில் முடிக்கப்படும். காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

வளாகத்தில் மசூதி மற்றும் பிற கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனை 100 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு பின்னர் 200 படுக்கை வசதியாக மேம்படுத்தப்படும். 

சமுதாய சமையலறை ஆரம்பத்தில் தினசரி 1,000 பேருக்கு உணவு வழங்கும் திறனைக் கொண்டிருக்கும். பின்னர் 2,000 நபர்களுக்கு உணவளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகத்தை உருவாக்க அறக்கட்டளை முடிவு செய்தது" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Embed widget