மேலும் அறிய

Congress Protest: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்; தடுப்புக் காவலில் ராகுல் காந்தி!

Congress Protest:எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ( (Indian National Congress) புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வரை பேரணி நடத்தினர். இதில், பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விஜய் செளக் பகுதியில் பேரணியாக சென்றுகொண்டிருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே , ஜெய்ராம் ரமேஷ், ரஞ்சீத் ராஜன் உள்ளிட்ட பலரும் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் போராட்டம் - முழு விவரம்:

செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி, “ இந்தியாவில் ஜனநாயகம் மரணித்து வருகிறது. சர்வாதிகாரம் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.  

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், காலை 10 மணியளவில் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவகத்திற்கு வந்தார். பிரியங்கா காந்தியும் போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவகத்திற்கு வந்தடைந்தார். 

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருந்து கட்சி உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்தும், கைகளில் கருப்பு நிற பேண்டுகள் அணிந்தும், நாடாளுமன்ற வளாகம் வழியாக குடியரசுத் தலைவர் மாளிகை வரை பேரணியாக செல்ல உள்ளனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் உள்பட பலரும் பங்கேற்கின்றனர். 

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun kharge) கருப்பு நிற டர்பன், குர்தா அணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். 

டெல்லி முழுவதும் போக்குவரது மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ், மக்கள் தங்களது பயணத்தை கவனத்துடன் மேற்க்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது. காங்கிரஸ் போராட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்றும் மக்களை எச்சரித்துள்ளனர். 

புது டெல்லியின் Lutyens பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்து இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் மழை பெய்து வரும் நிலையிலும், காங்கிரஸ் கட்சியினர் கொட்டும் மழையிலும் போராடி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராகுல்காந்திசெய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது, “ இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் மரணித்து வருகிறது. சர்வாதிகாரம் நடைபெற்று வருகிறது” என்று கூறினார். சர்வாதிகாரத்திற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாட்டின் நிதியமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இல்லையென்றால், நமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. நிதியமைச்சர் அவருக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதை மட்டும் செய்பவராக இருக்கிறார்.

புதுடெல்லி ஜன்தர் மந்தர் தவிர மற்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி காவல்துறை.  காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவகம், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலை மற்றும் அதை சுற்றி 7 கி.மீ. வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் அலுலவகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், அவர்களின் குடியிருப்பு மற்றும் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
Top 10 News Headlines: ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
Top 10 News Headlines: ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
Tamilnadu Roundup: 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது, தங்கம் விலை குறைவு - பரபரப்பான 10 மணி செய்திகள்
17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது, தங்கம் விலை குறைவு - பரபரப்பான 10 மணி செய்திகள்
ஆணவத்தின் உச்சம் -  ஒன்வேயில் ஸ்கூட்டரை இடித்த SUV.. வேண்டுமென்றே முதியவரை மோதி தூக்கி வீசும் வீடியோ
ஆணவத்தின் உச்சம் - ஒன்வேயில் ஸ்கூட்டரை இடித்த SUV.. வேண்டுமென்றே முதியவரை மோதி தூக்கி வீசும் வீடியோ
Lok Sabha: அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
Embed widget