மேலும் அறிய

Adani Report: ஏதோ தவறு நடக்கிறது.. அதானிக்கு ஏன் இவ்வளவு சலுகைகள்? கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி

இந்த சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், அதானி குறித்து மற்றொருஅமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக அந்த ஆய்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதானி குழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது.

அதானி  முறைகேடு தொடர்பாக இரண்டாவது ஆய்வறிக்கை:

இந்த சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், அதானி குறித்து மற்றொருஅமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பங்கு சந்தையில் அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர்கள்தான், OCCRP அமைப்பை நடத்தி வருகின்றனர். "அதானி குழுமத்தில் பெரும்பைான்மை பங்கினை வைத்துள்ள அதானி குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் பொதுத்துறை முதலீட்டாளர்கள் (அரசு நிறுவனங்கள்) உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள், அதானி நிறுவனங்களின் பங்கின் விலையை உயர்த்த உதவியுள்ளனர். எங்களுக்கு கிடைத்துள்ள பிரத்யேக ஆவணங்களின் முலம் இது தெரிய வந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி முறைகேடு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இது தொடர்பாக பேசியுள்ளார்.

அதானிக்கு ஏன் இவ்வளவு சலுகைகள் அளிக்கப்படுகிறது?

"ஜி 20 தலைவர்கள் இங்கு வருவதற்கு முன்பு இப்படி நடந்துள்ளது. பிரதமருக்கு நெருக்கமான ஒரு மனிதருக்கு (அதானி) சொந்தமான இந்த சிறப்பான நிறுவனம் எது என்றும், இந்தியா போன்ற பொருளாதாரத்தில் இந்த மனிதனுக்கு ஏன் இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் கேட்கப் போகிறார்கள்?

விசாரணை நடந்தது, செபிக்கு ஆதாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், கெளதம் அதானி எந்த தவறும் செய்யவில்லை என செபி தெரிவித்துள்ளது. இதனால், இங்கு ஏதோ தவறு இருப்பது தெளிவாகிறது.

இது யாருடைய பணம்?

முதல் கேள்வி எழுகிறது. அது என்னவென்றால். இது யாருடைய பணம்? இது அதானி உடையுதா அல்லது வேறு யாருடையதா? இதற்கு மூளையாக செயல்பட்டவர் கௌதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி. இந்த பண மோசடியில் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் நசீர் அலி ஷபான் அஹ்லி என்று அழைக்கப்படும் ஒரு ஜென்டில்மேன்.

மற்றொருவர் சாங் சுங் லிங் என்று அழைக்கப்படும் சீன ஜென்டில்மேன். எனவே, இரண்டாவது கேள்வி எழுகிறது. கிட்டத்தட்ட அனைத்து இந்திய உள்கட்டமைப்புகளையும் கட்டுப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றின் மதிப்பீட்டில் இந்த இரண்டு வெளிநாட்டினரும் விளையாட அனுமதிக்கப்படுவது ஏன்?

இந்தியாவில் ஜி-20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இது உலகில் இந்தியாவின் நிலையைப் பற்றியது. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்னவென்றால், நமது பொருளாதாரச் சூழல் மற்றும் இங்கு செயல்படும் வணிகங்களில் ஒரு சம நிலை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது. 

இன்று காலை, இரண்டு உலகளாவிய நிதி செய்தித்தாள்கள் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளன. இவை தற்செயலான செய்தித்தாள்கள் அல்ல. இந்த செய்தித்தாள்கள் இந்தியாவில் முதலீடு மற்றும் உலகின் பிற நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையை பாதிக்கிறது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget