மேலும் அறிய

I.N.D.I.A Alliance: ’இந்திய கூட்டணியை கண்டு பாஜக அச்சமடைந்துள்ளது; அதனை நாங்கள் ரசிக்கிறோம்’ - கே.எஸ் அழகிரி பேச்சு..

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கண்டு பாஜக அச்சமடைந்துள்ளடதாகவும், அதனை ரசிப்பதாகவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவிர்த்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமாக, பாட்னாவில் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் மார். அதைதொடர்ந்து, அண்மையில் காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய என பெயரிடப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயரிடப்பட்டது. இரு தரப்பிலும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. வருகின்ற நடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்களை இரு தரப்பினரும் வகுத்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிரிஷ் உப்பாத்யாயா என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தரப்பிலும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த வழக்கறிஞர்  விஜயன் பேசுகையில், ”இந்தியா என்ற பெயர் வைப்பதில் சட்ட சிக்கலாக இருக்காது.  இந்த பெயர் இந்திய அரச்சங்கத்தை குறிக்கக்கூடாது. அப்படி பார்க்கப்போனால் இந்திய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என பல கட்சிகள் இன்றளவும் அந்த பெயரை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியா என்ற பெயர் பயன்படுத்துவது பெரிய விஷயம் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசுகையில், “ மோடி எப்போது இதை பற்றி அதிகம் பேசி வருகிறாரோ, அப்போதே நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்பது அதன் பொருள். முதலில் அவர் எங்களை துட்சமாக மதித்தார், கூட்டணி அமைக்க முடியாது, கூட்டணி நிலைக்காது என கூறினார். ஆனால் அது அனைத்தும் பொய்து போனது. இந்தியா என்பது ஒற்றுமையை குறிக்கும் சொல் ஆகும். இதனால் மக்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது. மக்களை பற்றி குறைவாக எண்ணுகிறார் மோடி. ஒரு பெயரை வைக்கக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இந்த வழக்கின் பின் பாஜகவின் அச்சம் உள்ளது. அவர்களுடைய அச்சத்தை நாங்கள் ரசிக்கிறோம்” என கூறியுள்ளார்.

பாஜக தரப்பில் சீனிவாசன் கூறுகையில், “ தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த பெயர் அரசியலமைப்புச் சட்டத்தை கொச்சப்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த கூட்டணி நிச்சயமாக தோற்கப்போகும் கூட்டணி, சர்வதேச அளவில், பத்திரிக்கைகளில் இந்தியா தோல்வியடைந்தது என செய்திகள் வெளியாகும். இது தவறான புரிதலை வெளிநாடுகள் மத்தியில் பிரதிபளிக்கும். காங்கிரஸ் கட்சிக்கொடிக்கும் இந்திய தேசத்தின் கொடிக்கும் வித்தியாசங்கள் கிடையாது, பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். அனைவரின் பெயருக்கு பின்னால் காந்தி என போட்டுக்கொள்கின்றனர். தாங்கள் தான் இந்தியா என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இதனை செய்கின்றனர். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை” என குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget