மேலும் அறிய

இதுதான் இந்தியா.. இதுதான் நீதி.. அமெரிக்காவில் பரபரவென பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் இந்திய அமெரிக்கர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு பேசியுள்ளார். 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தங்களின் அரசு நடவடிக்கைகள் நீதித்துறையின் ஒப்புதலோடு நிகழ்கின்றன என்று நினைத்தாலும், எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலை நீதித்துறை முன்னிறுத்த வேண்டும் என்று நினைத்தாலும், நீதித்துறை என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்படும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் இந்திய அமெரிக்கர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு இவ்வாறு பேசியுள்ளார். 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, `இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தையும், 72வது குடியரசுத் தினத்தையும் எதிர்கொண்டு வரும் நிலையில், சற்றே வருத்தத்துடன் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனங்களின் முழு பணியையும் நாம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தங்களின் அரசு நடவடிக்கைகள் நீதித்துறையின் ஒப்புதலோடு நிகழ்கின்றன என்று நினைக்கின்றன. எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலை நீதித்துறை முன்னிறுத்த வேண்டும் என்று நினைக்கின்றன. இந்த சிந்தனைகளின் காரணமாக அரசியலமைப்பு பற்றிய போதிய புரிதல் மக்களுக்குச் செல்வதில்லை’ எனக் கூறியுள்ளார். 

இதுதான் இந்தியா.. இதுதான் நீதி.. அமெரிக்காவில் பரபரவென பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

தொடர்ந்து பேசிய அவர், `நீதித்துறையைப் பலவீனப்படுத்தும் நோக்கில், பொது மக்களிடம் இப்படியான அறியாமை தொடர்ந்து பரப்பப்படுகிறது. எனவே சிலவற்றைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் அரசியலமைப்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை சீர்செய்வதற்கு, இந்தியாவின் அரசியலமைப்புக் கலாச்சாரத்தைப் பெறுக்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வைப் பெருக்க வேண்டும். ஜனநாயகம் என்பதே அனைவரும் கலந்துகொள்ளும் ஒன்று தான்’ எனக் கூறியுள்ளார். 

இந்தியாவின் அமெரிக்காவும் அதன் பன்முகத்தன்மைக்காக பிரபலமடைந்திருப்பது குறித்து பேசியுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உலகம் முழுவதும் பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், அமெரிக்காவில் பன்முகத்தன்மை மதிக்கப்படுவதாலே, அங்கிருக்கும் இந்தியர்கள் தங்கள் திறமையால் முன்னேற முடிந்ததையும் குறிப்பிட்டுள்ளார். நம்மை இணைக்கும் விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்தி, நம்மைப் பிரிப்பவற்றில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, `அமைதிக்கும், வளர்ச்சிக்குமான வழியை அனைவரும் உள்ளடக்கிய ஒற்றுமையான சமூகமே உருவாக்குகிறது. நம்மை இணைக்கும் விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்தி, நம்மைப் பிரிப்பவற்றில் இருந்து விலகியிருக்க வேண்டும். தற்போதைய 21ஆம் நூற்றாண்டில், சிறிய பிரிவினை விவகாரங்கள் மனித, சமூக உறவுகளைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடக்கூடாது. நம் முன் இருக்கும் பிரிவினை விவகாரங்களை எதிர்த்து வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்காத அணுகுமுறை என்பது பேரிடருக்கான ஓர் அழைப்பு’ எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Warren Buffett: ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
Toyota Innova Crysta: போய் வரவா.! இன்னோவா க்ரிஸ்டா மாடலை கைவிடும் டொயோட்டா - எப்போது? எதற்கு?
Toyota Innova Crysta: போய் வரவா.! இன்னோவா க்ரிஸ்டா மாடலை கைவிடும் டொயோட்டா - எப்போது? எதற்கு?
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Top 10 News Headlines: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
Embed widget