![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை நீட்டிக்க வேண்டும்...தென்மண்டல கவுன்சிலில் முதலமைச்சர் முக ஸ்டாலின்!
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சிலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
![ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை நீட்டிக்க வேண்டும்...தென்மண்டல கவுன்சிலில் முதலமைச்சர் முக ஸ்டாலின்! Chief Minister Mk Stalin urged the Central Government to further extend the period for providing GST compensation to the states ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை நீட்டிக்க வேண்டும்...தென்மண்டல கவுன்சிலில் முதலமைச்சர் முக ஸ்டாலின்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/61292969530336c7fdb09d66004ef8f01662188363016175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவனந்தபுரத்தில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் தென் மண்டல கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை வகித்த அமித்ஷாவுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பரிசு வழங்கினார். தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார்.
View this post on Instagram
இதையடுத்து, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சிலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 3, 2022
தொடர்ந்து பேசிய அவர், மின்வாரிய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு காற்றாலை மின்சாரத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)