மேலும் அறிய

ஆணவ படுகொலை.. தன்பாலின ஈர்ப்பு.. மார்பக வரி.. சாட்டையை சுழற்றிய இந்திய தலைமை நீதிபதி..!

குடும்பத்தின் விருப்பத்தை மீறி வேறு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்வதால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆணவப்படுகொலை செய்யப்படுகின்றனர் என இந்திய தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

ஒருவரை காதலித்த காரணத்தால் படுகொலை செய்யப்படுவது எல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நிகழும். இப்போது எல்லாம் யார் சாதி பார்க்கின்றனர் என கேட்பவர்களுக்கு தினந்தோறும் ஆணவ படுகொலைகள் நிகழ்வது எப்படி தெரியாமல் இருக்கிறது என தெரியவில்லை. வேறு சாதியை சேர்ந்தவரை காதலித்த காரணத்திற்காக பெற்ற பிள்ளையை கொல்லும் போக்கு மனிதகுலத்திற்கு எதிரான செயல்.

ஆணவப்படுகொலை:

நாளுக்கு நாள் சாதிய ஆணவ படுகொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். குடும்பத்தின் விருப்பத்தை மீறி வேறு சாதியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாலும் திருமணம் செய்து கொள்வதாலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆணவப்படுகொலை செய்யப்படுகின்றனர் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தன்பாலின ஈர்ப்பை குற்றமாக்கிய இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377, மார்பக வரி, மும்பையில் மதுக்கூட நடனத்திற்கு தடை விதித்தது, திருமணம் மீறிய உறவு போன்ற அறநெறி தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசிய அவர், "எப்படி நடக்க வேண்டும், எது அறநெறி போன்ற விதிகளை ஆதிக்க சக்திகளே முடிவு செய்கின்றன" என்றார்.

அறநெறி:

'சட்டம் மற்றும் அறநெறி' என்ற தலைப்பில் உரையாற்றிய சந்திரசூட், "பலவீனமான விளிம்புநிலை மக்களுக்கு வேறு வழி இல்லாமல், பிழைப்பு நடத்துவதற்காக ஆதிக்க சக்திகளின் கலாசாரத்தை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதிக்க சக்திகள் அவமானப்படுத்துவிடுவார்களோ, ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் எதிர் கலாசாரத்தை பலவீனமான மக்கள் முன்வைக்க முடியாமல் உள்ளனர். 

எதிர் கலாசாரத்தை பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்கள் உருவாக்கினாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தோற்கடித்து மேலும் அவர்களை அந்நியப்படுத்துகின்றனர். பாதிப்புக்குள்ளாக்கூடிய மக்கள் சமூக கட்டமைப்பின் அடிமட்டத்தில் வைக்கப்படுகின்றன. அதை அவர்கள் ஏற்று கொள்வதாக கூறுவது ஒரு கட்டுக்கதை. எனக்கு அறநெறியாக இருப்பது உங்களுக்கு அறநெறியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளதா?" என்றார்.

ஆணவப்படுகொலை:

கடந்த 1991ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை அவரது பெற்றோரே கொலை செய்த சம்பவம் குறித்து பேசிய அவர், "அந்தக் குற்றத்தை கிராம மக்களே ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் இதுதான் அறம் எனக் கூறி அவர்கள் செயலை ஏற்று கொண்டனர். நியாயப்படுத்தினர். 

இதுதான், பகுத்தறிவு உள்ளவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் நடத்தை விதியா? இது பகுத்தறிவாளர்களால் முன்வைக்கப்பட்ட நடத்தை நெறிமுறை இல்லை என்றால்? ஒவ்வொரு ஆண்டும் பலர் காதலிப்பதற்காக அல்லது தங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்ததற்காக அல்லது தங்கள் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாக கூறி கொல்லப்படுகிறார்கள்" என்றார்.

தன்பாலின ஈர்ப்பு:

தன்பாலின ஈர்ப்பை குற்றம் இல்லை என அறிவித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசிய அவர், "அநீதியை சரி செய்தோம். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377, கடந்த காலத்தின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தனிநபரின் உரிமைகளில் அரசியலமைப்பின் அறநெறி கவனம் செலுத்துகிறது. சமூகத்தின் பிரபலமான ஒழுக்கக் கருத்துக்களிலிருந்து அதைப் பாதுகாக்கிறது" என்றார்.

மும்பையில் பாம்பே வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த அசோக் தேசாய் நினைவு கருத்தரங்கில் இந்த கருத்துகளை சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget