மேலும் அறிய

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்...சிக்கிய சிறுவன்...காவல்துறை எடுத்த நடவடிக்கை...நடந்தது என்ன?

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 8 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 ராணுவ வீரர்களும் ஓட்டுநர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மாவோயிஸ்ட் தாக்குதல்:

தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் படையை (DRG) சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்போதும் அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 8 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தமாக 17 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தேடுதல் வேட்டையில் சிக்கிய சிறுவன்:

மாவோயிஸ்ட் தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை குறித்து விரிவாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, "இந்த எட்டு மாவோயிஸ்டுகளில், ஐந்து பேர் புதன்கிழமை (மே 17) கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், சிறுவன் உட்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை அரன்பூர் காவல் நிலையப் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதியில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.

பெட்கா கிராமத்தைச் சேர்ந்த மாசா கவாசி, கோசா மாண்டவி, அர்ஜுன் குஞ்சம், தேவா மத்வி மற்றும் கங்கா மாத்வி ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்ட பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

போலீஸ் காவல் முடிவடைந்த பின்னர், ஐந்து மாவோயிஸ்டுகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாண்டி மாத்வி மற்றும் முயா கோவாசி ஆகிய இருவருடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது, ஏழு பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான்" என்றார்.

மாவோயிஸ்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்:

முன்னதாக, மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பாகேல், "ஜவான்களின் தியாகம் வீண் போகாது. நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும். நக்சலைட்டுகளுக்கு எதிராக முக்கிய பகுதிகளில் நமது வீரர்கள் கடும் சண்டையிட்டு வருகின்றனர். 

கடந்த நான்கு ஆண்டுகளில், நக்சலைட்டுகளின் மையப் பகுதிகளில் 75 முகாம்கள் (பாதுகாப்புப் படைகளின்) அமைக்கப்பட்டுள்ளன. முன்பு பாதுகாப்புப் பகுதிகளில் மட்டுமே முகாம்கள் அமைக்கப்பட்டன.

இப்போது, ​​அரன்பூர் மற்றும் பைராம்கரில் இருந்து ஜாகர்குண்டாவுக்குச் செல்ல சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், சுக்மாவுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஹித்மாவின் (பயங்கர நக்சல் தளபதி) தலைமையகம் என்று அழைக்கப்படும் புவர்த்தி (பிஜப்பூர் மாவட்டத்தில்) இப்போது எல்லா பக்கங்களிலிருந்தும் (பாதுகாப்புப் படை முகாம்களால்) சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மாவோயிஸ்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்" என்றார்.

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget