![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chennai Coimbatore Vande Bharat: சென்னை - கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்..! தெரிந்து கொள்ள வேண்டிவை என்ன?
சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
![Chennai Coimbatore Vande Bharat: சென்னை - கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்..! தெரிந்து கொள்ள வேண்டிவை என்ன? Chennai Coimbatore Vande Bharat Express Train Route Speed Stops Timings Capacity Coaches All Details You Need to Know Chennai Coimbatore Vande Bharat: சென்னை - கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்..! தெரிந்து கொள்ள வேண்டிவை என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/07/f9408568116a0dea848a990f303f273a1680879467151224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையேயும், சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன்மூலம், நாட்டில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்க உள்ளது.
வந்தே பாரத்:
சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையேயான புதிய வந்தே பாரத் ரயிலை சென்னை சென்ட்ரலில் இருந்து பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்குப் பிறகு சென்னையில் இருந்து இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.
தென்னிந்தியாவில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயிலான சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பான விவரங்களை கீழே பார்ப்போம்.
எத்தனை பயணிகள் பயணம் செய்யலாம்?
இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் கோச் உட்பட 8 பெட்டிகள் உள்ளது. 530 பேர் வரை பயணிக்க முடியும்.
ரயில் செல்லும் பாதை, நேரம், வேகம்:
சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே 495.28 தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் கடக்கும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலத்தில் நிறுத்தப்படும். புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.
ரயில் நேரம் மற்றும் டிக்கெட் கட்டணம்:
இந்த ரயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். திரும்பும் போது, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும். சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலின் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே இன்னும் நிர்ணயம் செய்யவில்லை.
வர்த்தகத்தை ஊக்குவிக்கபோகும் வந்தே பாரத் ரயில்:
சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் முக்கிய வணிக மற்றும் நகர்ப்புற மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், சென்னை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியமானது அதன் மேம்படுத்தப்பட்ட இணைப்பு காரணமாக அதிக முதலீட்டைக் காண வாய்ப்புள்ளது.
இந்தியாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்:
டெல்லி - வாரணாசி
டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா
காந்தி நகர் தலைநகர் - மும்பை சென்ட்ரல்
அம்ப் ஆண்டௌரா - டெல்லி
சென்னை சென்ட்ரல் - மைசூர்
பிலாஸ்பூர் - நாக்பூர்
புதிய ஜல்பைகுரி - ஹவுரா
செகந்திராபாத் - விசாகப்பட்டினம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (மும்பை) - சோலாப்பூர்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (மும்பை) - ஷிர்டி
போபால் - டெல்லி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)