மேலும் அறிய

அதிகரிக்கும் வேலை நேரம்...குறைக்கப்படும் சம்பளம்...புதிய ஊதிய விதிகள் சொல்வது என்ன?

புதிய ஊதிய விதிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் வரைவு சட்டங்களை இயற்றியுள்ளது.

புதிய ஊதிய விதிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் வரைவு சட்டங்களை இயற்றியுள்ளது. இருப்பினும், வரைவு சட்டங்களை வகுக்க மாநிலங்கள் அதிக நேரம் எடுத்து கொண்டதால் புதிய தொழிலாளர் சட்டத்தை அமலாக்க கால தாமதம் ஆகியுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. 

அரசு இந்தப் புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தாலும், பல மாநிலங்கள் இன்னும் புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தில், தொழிலாளர் தொடர்பான விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், இதற்கு மாநிலங்கள் கட்டாயமாக ஒப்புதல் வழங்க வேண்டும். 

ஊதிய விதிகள் 2019இன் கீழ், இதுவரை, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளன. 

விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய தொழிலாளர் விதிகளால் ஊழியர்களின் வேலை நேரம், அவர்களின் சம்பளம் விடுப்பு முறை பாதிப்பை சந்திக்க உள்ளன. புதிய ஊதிய விதிகளின்படி, பணியாளரின் கடைசி வேலை நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ஊதியங்கள் மற்றும் நிலுவைத் தொகையை முழுமையான அளிக்க வேண்டும்.

இதேபோல், நிறுவனங்கள் தேவைப்பட்டால் ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் கூடுதல் விடுப்பு வழங்க வேண்டும். புதிய ஊதிய விதிகளின்படி அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும். இது பணியாளர் மற்றும் முதலாளி ஆகிய இருவரின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பை அதிகரிக்கும்.

ஏற்கனவே இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு பதில், 2019 இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த தொழிலாளர் சட்டம் அமலுக்கு வருகிறது. ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவை தொடர்பான நான்கு புதிய விதிகள்  ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்தது.

கடைசி வேலை நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் மொத்த நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்

ராஜினாமா செய்தாலோ, நிறுவனமே நீக்கினோலோ, பணியாளரின் கடைசி வேலை நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ஒரு நிறுவனம் ஊதியத்தின் முழு மற்றும் இறுதி நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்பது புதிய சட்டத்தின் படி கட்டாயமாகிறது. தற்போது, ​​முழு மற்றும் இறுதி நிலுவை தொகையை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான காலத்திற்குள் அளிப்பது நடைமுறையில் இருக்கிறது.

அதிகரிக்கும் ஊழியர்களின் வேலை நேரம்

புதிய ஊதிய விதிகளின்படி, ஊழியர்களின் வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்க நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், அவர்கள் ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும். எனவே, வேலை நேரம் அதிகரித்தால், தற்போதுள்ள 5க்கு பதிலாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணியாளர்கள் பணிபுரிவார்கள்.

பணியாளர்களுக்கு வாரந்தோறும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் 48 மணி நேர வேலை என்ற குறைந்தபட்ச தேவையுடன் இது தொடர்கிறது. ஒரு ஊழியர் வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தால், முதலாளி கூடுதல் நேரக் ஊதியத்தை வழங்க வேண்டும்.

கைக்கு வரும் சம்பளம் குறைகிறது

புதிய சட்டத்தின்படி, பணியாளரின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50% ஆக இருக்க வேண்டும். இது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தைக் குறைத்து, பணியமர்த்துபவர் மற்றும் பணியாளர் இருவரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை அதிகரிப்பதால், ஓய்வூதிய சேமிப்பு அதிகரிக்கும்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
Rasi Palan Today (16-07-2026): இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Rasi Palan Today (16-07-2026): இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Embed widget