மேலும் அறிய

Nambi Narayanan Chandrayaan: சந்திரயானால் மாறப்போகும் விண்வெளி வியாபாரம்.. ரூ.50 லட்சம் கோடி - நம்பி நாராயணன் ஓப்பன் டாக்

சந்திரயான் 3 மூலம் விண்வெளி வியாபாரமே மாறப்போகிறது என இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3 மூலம் விண்வெளி வியாபாரமே மாறப்போகிறது என இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3 விண்கலம்:

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சுமார் ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. உலக நாடுகளே உற்று நோக்கும் இந்த விண்கலம், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என, இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கேம் சேஞ்சர் - நம்பி நாராயணன்:

சந்திரயான் 3 விண்கலம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “சந்திரயான் 3 விண்கலம் கண்டிப்பாக இந்தியாவிற்கான ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். இது வெற்றிகரமாக நடைபெறும் என நம்புகிறேன். இதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு உந்துசக்தியாக மாறும். விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட வேண்டும் என நம்பிக்கையுடன் கடவுளை பிரார்த்திப்போம். சந்திரயான் 2-ல் கிடைத்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுள்ளோம்.

பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளன:

தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால், கடந்த முறை இந்தியாவின் ரோவர் கருவியை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. ஆனால், தற்போது அந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த முறை ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு, நிலவில் தடம் பதித்த அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டிட்யலில் இந்தியா இணையும் என நம்புகிறேன். ஒட்டுமொத்த நாடும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட வேண்டும் என எதிர்பார்த்து இருப்பதை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. 

வியாபாரம் பெருகும்:

சந்திரயான் 3 வெற்றி பெறும்பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் விண்வெளித் துறையில் வளர்ச்சி கிடைக்கும் என்பதோடு, 600 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 50 லட்சம் கோடி மதிப்பிலான விண்வெளி தொழிலில் தற்போது 2 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே பங்களித்து வரும் இந்தியாவின் நிலை மேம்படும். விண்வெளி ஆராய்ச்சி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும், மத்திய அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.

”வெளிநாட்டு நிறுவனங்களும் களமிறங்கும்”

மத்திய அரசின் நடவடிக்கையால் பல்வேறு ஸ்டார்-அப் நிறுவனங்கள் இந்த துறையில் உருவாகலாம். இதில் அதிகப்படியான முதலீடுகள் ஏற்படலாம். வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் விண்வெளி ஆராய்சிக்காக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடரலாம் அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து முதலீடு செய்யலாம். ஒரு நாடு வாழ்வதற்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் அவசியம். மிகப்பெரிய விண்வெளி திட்டங்களை முன்னெடுக்க, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் போன்று, சீனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் என்ற ஒன்றை உருவாக்க வேண்டும்” என நம்பி நாராயணன் தெரிவித்துள்ளர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
Embed widget