மேலும் அறிய

முன் கள சுகாதாரப் பணியாளர் காப்பீடு திட்டம் நிறைவு : நீட்டிக்காத மத்திய அரசு

முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் நிறைவு பெற்ற நிலையில், கொரோனா தீவிரமாகி வரும் நிலையில் காப்பீடு நீட்டிக்கப்படவில்லை எனத்தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட கோவிட் - 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்றி வரும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை நீட்டிக்க திட்டமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. 

கடந்தாண்டு இந்த திட்டத்தை அறிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், " மொத்தம் 22.12 லட்சம் பொது சுகாதார சேவையாளர்களுக்கு 90 நாட்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு இது காப்பீடு அளிக்கும். இதில் சமுதாய சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவார்கள்" என்று தெரிவித்தார்.  இதனையடுத்து இத்திட்டம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது.   

 

முன் கள சுகாதாரப் பணியாளர் காப்பீடு திட்டம் நிறைவு : நீட்டிக்காத மத்திய அரசு
சுகாதாரப் பணியாளர்கள்

 

நாடு முழுவதும் கொரோனா நோய்த தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,61,500 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, தற்போது 18,01,316 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

சுகாதாரப்  பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு திட்டம் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.    

இத்திட்டத்தின் கீழ், கோவிட்-19 பாதித்த நோயாளிளுடன் நேரடியான தொடர்பில் ஈடுபட்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் பரவும் ஆபத்து வாய்ப்பில் இருக்கும் இந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. 

 

முன் கள சுகாதாரப் பணியாளர் காப்பீடு திட்டம் நிறைவு : நீட்டிக்காத மத்திய அரசு

 

மேலும், கோவிட் - 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்ற அழைக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை அலுவலர்கள்/ ஓய்வுபெற்ற / தன்னார்வலர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / ஒப்பந்த / தினசரி கூலி அடிப்படையிலான / தற்காலிக / அயல்பணி அடிப்படையில் மாநில / மத்திய அரசு மருத்துவமனைகளில்  பணிபுரியும் அனைவரும் இதில் சேர்க்கப்பட்டனர். 

பயனாளி வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருந்தாலும், அதற்கும் கூடுதலாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த மாதம் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு  அனுப்பிய சுற்றறிக்கையில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்  மார்ச் 24 அன்று முடிவடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 287 பேருக்கு இந்த காப்பீடு திட்டத்தில் பணப் பலன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.   

மேலும், " 2021 மார்ச் 24 நள்ளிரவு வரை சமர்பிக்கப்பட்ட  அனைத்து உரிமை கோரல்களும் இத்திட்டத்தின் கீழ் பணப் பலன் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். உரிமைக் கோரல்கள் தொடப்ரான அனைத்து ஆவணங்களையும் காப்பீட்டு நிறுவனத்திற்கு சமர்பிக்க ஒரு மாதகால அவகாசம் அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.  

மத்திய அரசின் இந்த போக்கு சுகாதாரப் பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை படுதீவிரமாக உள்ளது.  கடந்த சில நாட்களாக அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு அதன் உணர்வற்ற நிலையை காட்டுவதாக உள்ளதென மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.    

இதுவரை, கோவிட் - 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்றி வந்த முன்கள சுகாதாரப் பணியாளர்கள் இறப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. 287 பேர் மட்டுமே இந்த காப்பீடு திட்டத்தில் பணப் பலன் பெற்றுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 

739 எம்பிபிஎஸ் மருத்துவர்கள் கொரோனா தொடர்புடைய பணிகளால் மரணம் அடைந்ததாக இந்திய மருத்துவர்கள் சங்கம் முன்னதாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.             

தலைப்பு செய்திகள்

Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Top 10 News Headlines: மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Kia UpComing SUV: ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget