மேலும் அறிய

பாபா ராம்தேவ் மீது தேச துரோக வழக்கு; இந்திய மருத்துவ கழகம் கடிதம்

பாபா ராம்தேவ் மீது தேசதுரோக தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுங்கள் என பிரதமருக்கு இந்திய மருத்துவக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது இந்திய மருத்துவக் கழகம் புகார்க் கடிதம் அனுப்பியுள்ளது. அவர் மீது தேசதுரோக தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.
 

பாபா ராம்தேவ் மீது தேச துரோக வழக்கு; இந்திய மருத்துவ கழகம் கடிதம்
அக்கடிதததின் விவரம் வருமாறு:
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தாங்கள் காட்டிவரும் முனைப்பின் வழியில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு கொரோனாவுக்கு எதிரான ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. அரசாங்கத்தின் முயற்சியால் இதுவரை 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே குறுகிய காலத்தில் இத்தனை பெரிய அளவில் தடுப்பூசி செலுத்திய சாதனை நம்முடியது. இந்த வேளையில் தடுப்பூசி தயாரிப்புக்கு தாங்கள் அளித்த ஊக்கத்தையும், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற நீங்கள் காட்டும் முனைப்பையும் நாங்கள் மதிக்கிறோம்.
நாட்டில் இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களில் வெறும்  0.06% பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களிலும் வெகுக் குறைவானவர்களுக்கே தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
எனவே, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்பது உறுதியாகிவிட்டது. தடுப்பூசியால் நாம் நம் மக்களைப் பாதுகாக்கிறோம். இதுதொடர்பாக எதிர்வரும் மன் கி பாத் நிகழ்ச்சியில் தாங்கள் மக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படியான சூழலில் நாங்கள் மிகுந்த வேதனையுடன் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் அவதூறு வீடியோ பற்றி தெரிவிக்கிறோம். அவர் அந்த வீடியோவில் இதுவரை நாடுமுழுவது 10,000 மருத்துவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அலோபதி மருத்துவத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாகவும் அவதூறு பரப்பியிருக்கிறார்.
ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றியே நவீன அலோபதி சிகிச்சைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கும்போது இந்த சிகிச்சை முறையை குறை கூறுபவர்கள் மத்திய அரசைக் கேள்வி கேட்கிறார்கள் என்றே அர்த்தம்.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவ முன்களப் பணியாளர்கள் செயல்படுகின்றோம்.
கொரோனா முதல் அலையில் 513 மருத்துவர்களும், இரண்டாவது அலையில் இதுவரை 753 மருத்துவர்களும் இறந்துள்ளனர். இப்போதும் கூட நாடு முழுவதும் 10 லட்சம் மருத்துவர்கள் மருத்துவப் பணிகளை செய்து வருகின்றனர்.

பாபா ராம்தேவ் மீது தேச துரோக வழக்கு; இந்திய மருத்துவ கழகம் கடிதம்
இனி எதிர்வரும் காலத்திலும் அரசாங்கத்துடன் கைகோர்த்து கொரோனாவை எதிர்கொள்ளும் என உறுதியளிக்கிறோம். ஆனால், ஒருசில நபர்கள் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பும்போது அதை அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என வேண்டுகிறோம். பாபா ராம்தேவ் மீது தேசதுரோக தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாபா ராம்தேவ் தனது சர்ச்சைக் கருத்தைத் திரும்பப் பெறுவதாகக் கூறியதோடு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கும் விளக்கக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Kerala: பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. மாநில அரசிடம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெற்ற குடிமகன்!
Kerala: பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. மாநில அரசிடம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெற்ற குடிமகன்!
Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்

வீடியோ

TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
CM Vijay Report |
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ-வை கைது செய்வீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
EPS: பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ-வை கைது செய்வீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
4 லட்சம் ரூபாய் ஆஃபர்! MG கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி - எந்தெந்த வண்டிக்கு?
4 லட்சம் ரூபாய் ஆஃபர்! MG கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி - எந்தெந்த வண்டிக்கு?
FIFA World Cup: மிஸ் பண்ணிட்டீங்களே! 1950 உலகக்கோப்பை கால்பந்தை இந்தியா தவறவிட்டது எப்படி?
FIFA World Cup: மிஸ் பண்ணிட்டீங்களே! 1950 உலகக்கோப்பை கால்பந்தை இந்தியா தவறவிட்டது எப்படி?
மாநகராட்சி தவறால் மக்களுக்கு பாதிப்பா? உடனே மருத்துவர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக- அன்புமணி
மாநகராட்சி தவறால் மக்களுக்கு பாதிப்பா? உடனே மருத்துவர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக- அன்புமணி
Tata Sierra EV: இவி அவதாரத்தில் டாடா சியரா.! லாஞ்ச் டேட் லாக் ஆயிடுச்சு; ரேஞ்ச், அம்சங்கள் அட்டகாசம்.!
இவி அவதாரத்தில் டாடா சியரா.! லாஞ்ச் டேட் லாக் ஆயிடுச்சு; ரேஞ்ச், அம்சங்கள் அட்டகாசம்.!
Rajya Sabha MP Paveen Chakravarty : போட்டியின்றி வெற்றி.! எம்.பியானார் பிரவீன் சக்கரவர்த்தி- அதிகரித்தது காங்கிரஸ் பலம்
போட்டியின்றி வெற்றி.! எம்.பியானார் பிரவீன் சக்கரவர்த்தி- அதிகரித்தது காங்கிரஸ் பலம்
அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’
அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’
Embed widget