மேலும் அறிய

சபரிமலை தங்கம் கொள்ளை: இறுதி அறிக்கை மார்ச் 31-க்குள்! சி.பி.எம் தொடர்பு, நடிகர் ஜெயராம் விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை தங்கம் மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் கொள்ளை தொடர்பான வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏ.பத்மகுமார் ஆளும் சி.பி.எம் கட்சியில் நேரடியாக பதவியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். விஜயகுமாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர். கே.பி.சங்கரதாஸ் சி.பி.ஐ கட்சியை சேர்ந்தவராவார். சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடையே கடந்த  2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலையில் உள்ள செம்புத் தகடுகள் மீது தங்கம் பதிக்கும் திருப்பணிக்கு உபயம் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது.


சபரிமலை தங்கம் கொள்ளை: இறுதி அறிக்கை மார்ச் 31-க்குள்! சி.பி.எம் தொடர்பு, நடிகர் ஜெயராம் விசாரணை!

இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைத்தது உயர் நீதிமன்றம். கருவறையின் முன்பகுதியில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளின் செம்பு கவசங்கள் மீது பதியப்பட்ட தங்கம் மற்றும் கருவறை திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்து தனித்தனியாக 2 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேரள பிரபல நடிகர் ஜெயராம் உட்பட பல்வேறு தரப்பினரிடையே தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சபரிமலை கோயிலில் தங்கம் திருடு போன வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கை மார்ச் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை தங்கம் மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் கொள்ளை தொடர்பான வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், இந்த வழக்கானது உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கம் திருட்டு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சிறப்புப் புலனாய்வுக் குழு சேகரித்த 36 மாதிரிகள், கொல்லம் விசாரணை ஆணையர் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


சபரிமலை தங்கம் கொள்ளை: இறுதி அறிக்கை மார்ச் 31-க்குள்! சி.பி.எம் தொடர்பு, நடிகர் ஜெயராம் விசாரணை!

அவற்றை அறிவியல்பூர்வ சோதனைக்காக ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய உலோகவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவற்றை கட்டணமின்றி பகுப்பாய்வு செய்து தருவதாக தேசிய உலோகவியல் ஆய்வகம் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து விசாரணை இறுதி அறிக்கை மார்ச் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட சில நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தொலைபேசி தொடர்புகள் குறித்து செல்போன் சேவை வழங்குநர்களிடமிருந்து அழைப்பு தரவு பதிவுகளைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் சிறப்பு விசாரணைக் குழு தரப்பில் முறையிடப்பட்டது. இதனையேற்றுக் கொண்ட நீதிபதிகள், சபரிமலை கோயிலில் சேகரித்த மாதிரிகளை தேசிய உலோகவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்: விரைவில் புதிய ரயில்கள்! தமிழக பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்: விரைவில் புதிய ரயில்கள்! தமிழக பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: முர்மு விவகாரம்-வலுக்கும் கண்டனம், இந்தியாவிற்கு சீனா அழைப்பு, ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட் - 11 மணி செய்திகள்
முர்மு விவகாரம்-வலுக்கும் கண்டனம், இந்தியாவிற்கு சீனா அழைப்பு, ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட் - 11 மணி செய்திகள்
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
Embed widget