மேலும் அறிய

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை.. ‘பலமுறை கோரிக்கையை நிராகரித்த கனடா’ .. இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டு.. என்னதான் ஆச்சு?

சீக்கியர்கள் அதிகம் வாழும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக வேண்டும் என்பது சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இருந்தே கோரிக்கையாக உள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் தீர்க்க முடியாத நீண்டகால பிரச்சனைகளில் ஒன்று ‘காலிஸ்தான்’ எனப்படும் தனி நாடு கோரிக்கை. சீக்கிய மக்கள் அதிகம் வாழும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக வேண்டும் என்பது சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இருந்தே போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரங்கள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் நட்புறவுடன் இருக்கும் கனடா நாட்டில் தொடரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. 

இப்படியான நிலையில் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் சர்ரே நகரில் குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இரண்டு மர்ம நபர்களால் அவர் கொல்லப்பட்டத்தை போலீசார் உறுதி செய்தனர். ஹர்தீப் சிங் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் நீதிக்கான சீக்கியர் அமைப்பில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில்  அவர் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியிருந்தது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘இந்த விஷயத்தை தெளிவுப்படுத்துவதில் இந்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம்’ என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவரை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா நாட்டு தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. இதனிடையே இந்த விவகாரத்தில் இருநாடுகள் இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடாவில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா பலமுறை விடுத்த கோரிக்கையை அந்நாட்டு அரசு தொடர்ந்து நிராகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கிட்டதட்ட 9 பயங்கரவாத பிரிவுகள் கனடாவில் செயல்பட்டு வருவதாகவும், அவர்களை நாடு கடத்த கோரிக்கைளை விடுக்கப்பட்ட நிலையில் கனடா எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை உள்ளிட்ட பல செயல்களிலும் இந்த அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்து, பிரிவினைவாத உணர்வுகளை தூண்டி இந்தியாவில் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துவார்கள். இது தொடர்பாக பல ஆவணங்களை கனடாவில் சமர்பித்த நிலையிலும் இந்தியாவின் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போய்விட்டது. 

மேலும் டாஷ்மேஷ் படைப்பிரிவின் தலைவர் குர்வந்த் சிங்க், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதியாக அறியப்படும் பகத்சிங் பிரார், மொனிந்தர் சிங் புல், சதீந்தர் பால் சிங் கில் என பலரும் கனடாவில் இருக்கும் இந்தியாவால் தேடப்படுபவர்கள் ஆவர் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இப்படியான சூழலில் அடுத்தடுத்து இருநாடுகள் உறவில் என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு உலகநாடுகளிடையே எழுந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
"இந்தியாவின் முதல் 'ஸ்டாப்-லெஸ்' டோல்கேட்!" – சுங்கச்சாவடி வரிசையில் காத்திருக்க இனி வேலையில்லை
Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?
25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Sasikumar:
Sasikumar: "சசிகுமார் எனும் ஃபீனிக்ஸ் பறவை.." புகழாரம் சூடிய நந்தன் பட இயக்குனர்!
"8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!" – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
Embed widget