மேலும் அறிய

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை.. ‘பலமுறை கோரிக்கையை நிராகரித்த கனடா’ .. இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டு.. என்னதான் ஆச்சு?

சீக்கியர்கள் அதிகம் வாழும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக வேண்டும் என்பது சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இருந்தே கோரிக்கையாக உள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் தீர்க்க முடியாத நீண்டகால பிரச்சனைகளில் ஒன்று ‘காலிஸ்தான்’ எனப்படும் தனி நாடு கோரிக்கை. சீக்கிய மக்கள் அதிகம் வாழும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக வேண்டும் என்பது சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இருந்தே போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரங்கள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் நட்புறவுடன் இருக்கும் கனடா நாட்டில் தொடரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. 

இப்படியான நிலையில் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் சர்ரே நகரில் குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இரண்டு மர்ம நபர்களால் அவர் கொல்லப்பட்டத்தை போலீசார் உறுதி செய்தனர். ஹர்தீப் சிங் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் நீதிக்கான சீக்கியர் அமைப்பில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில்  அவர் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியிருந்தது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘இந்த விஷயத்தை தெளிவுப்படுத்துவதில் இந்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம்’ என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவரை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா நாட்டு தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. இதனிடையே இந்த விவகாரத்தில் இருநாடுகள் இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடாவில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா பலமுறை விடுத்த கோரிக்கையை அந்நாட்டு அரசு தொடர்ந்து நிராகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கிட்டதட்ட 9 பயங்கரவாத பிரிவுகள் கனடாவில் செயல்பட்டு வருவதாகவும், அவர்களை நாடு கடத்த கோரிக்கைளை விடுக்கப்பட்ட நிலையில் கனடா எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை உள்ளிட்ட பல செயல்களிலும் இந்த அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்து, பிரிவினைவாத உணர்வுகளை தூண்டி இந்தியாவில் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துவார்கள். இது தொடர்பாக பல ஆவணங்களை கனடாவில் சமர்பித்த நிலையிலும் இந்தியாவின் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போய்விட்டது. 

மேலும் டாஷ்மேஷ் படைப்பிரிவின் தலைவர் குர்வந்த் சிங்க், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதியாக அறியப்படும் பகத்சிங் பிரார், மொனிந்தர் சிங் புல், சதீந்தர் பால் சிங் கில் என பலரும் கனடாவில் இருக்கும் இந்தியாவால் தேடப்படுபவர்கள் ஆவர் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இப்படியான சூழலில் அடுத்தடுத்து இருநாடுகள் உறவில் என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு உலகநாடுகளிடையே எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget