மேலும் அறிய

Breaking News LIVE : 7 இடங்களில் பேருந்து நிலையங்கள் - அரசாணை வெளியீடு 

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்,.

LIVE

Key Events
Breaking News LIVE : 7 இடங்களில் பேருந்து நிலையங்கள் - அரசாணை வெளியீடு 

Background

சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

9 மாதங்களை கடந்தும் மாறாத விலை 

கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.

அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 282வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 

அதன்படி இன்று (பிப்ரவரி 27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும்  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

17:44 PM (IST)  •  27 Feb 2023

டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவுக்கு 5 நாட்கள் காவல்- சிபிஐ நீதிமன்றம்

மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா மீதான வழக்கு  சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசார்ணை நடைபெற்றது. இவ்வழக்கில் 5 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

16:38 PM (IST)  •  27 Feb 2023

Breaking News LIVE : 7 இடங்களில் பேருந்து நிலையங்கள் - அரசாணை வெளியீடு 

 எடப்பாடி, ஆற்காடு, திருவள்ளூர், ராமநாதபுரம், மேட்டூர், சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய 7 நகராட்சியில் ரூபாய் 93 கோடி செலவில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

16:00 PM (IST)  •  27 Feb 2023

Breaking News LIVE : நாகாலாந்து தேர்தல் - வாக்குப்பதிவு நிலவரம்!

நாகாலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.99% வாக்குகள் பதிவாகியுள்ளன.

15:44 PM (IST)  •  27 Feb 2023

கைதான டெல்லி துணை முதலமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

விரிவாக படிக்க: Manish Sisodia Arrested: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது - பெரும் பரபரப்பு..!

14:25 PM (IST)  •  27 Feb 2023

குரூப் 2 தேர்வு தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து!
திருவள்ளூர் ரயில் விபத்து - ரயில்கள் புறப்படுவதில் தாமதம்! - லிஸ்ட் இங்கே
திருவள்ளூர் ரயில் விபத்து - ரயில்கள் புறப்படுவதில் தாமதம்! - லிஸ்ட் இங்கே
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
"அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி" விஜயதசமி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் முர்மு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து!
திருவள்ளூர் ரயில் விபத்து - ரயில்கள் புறப்படுவதில் தாமதம்! - லிஸ்ட் இங்கே
திருவள்ளூர் ரயில் விபத்து - ரயில்கள் புறப்படுவதில் தாமதம்! - லிஸ்ட் இங்கே
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
"அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி" விஜயதசமி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் முர்மு!
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி
ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி
Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
"புத்தர் பிறந்த இடத்தில் இருந்து வருகிறேன்" தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
Embed widget