Breaking LIVE : திருப்பூரில் 9 செ.மீ. மழை பதிவு
நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் காணலாம்.
Background
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நேற்று நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு ஜூலை 1 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தகுந்த அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்ற தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என்றும் தெரிவித்தனர்.
அதிமுகவினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், கட்சி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் வாதம் முன்வைத்தனர்.
ஜூன் 23 ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என மூத்த தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டினர்.
பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின் பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்
நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு





















