மேலும் அறிய

Breaking News LIVE:தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5,796 கோடி வரி பகிர்வு

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5,796 கோடி வரி பகிர்வு

Background

சென்னையில் தொடர்ந்து 293வது நாள்களாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 

இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.

தொடர்ந்து மாறாத எரிபொருள் விலை 

 

சென்னையில் இன்று (மார்ச்.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 292வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 

இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  

இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

21:43 PM (IST)  •  10 Mar 2023

தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5,796 கோடி வரி பகிர்வு

ஜி.எஸ்.டி. வரி பகிர்வாக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 769 கோடியை மத்திய அரசு பகிர்ந்து அளித்துள்ளது. 

18:06 PM (IST)  •  10 Mar 2023

Breaking News LIVE: காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் சனிக்கிழமை (நாளை) இயங்கும் என்று அறுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை அனைத்து வகையான பள்ளிகளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

18:03 PM (IST)  •  10 Mar 2023

Breaking News LIVE: வணிக வரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு !

வணிக வரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்ததன்படி, உதவியாளர்களாக உள்ள 1000 பேருக்கு பதவி உயர்வு. பணி மூப்பு அடிப்படையில் உதவியாளர்களாக உள்ள ஆயிரம் பேர் வணிகவரி துணை அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

17:58 PM (IST)  •  10 Mar 2023

Breaking News LIVE: இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பு; ஜி.வி.பிரகாஷ் மேல்முறையீடு - வருமான வரித்துறை பதில் அளிக்க ஆணை!

இசை படைப்புகளுக்கு சேவைவரி செலுத்த ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் மேல்முறையீடு; காப்புரிமைக்கு தயாரிப்பாளர்கள் உரிமையாளர் ஆகிவிடுவதால் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் என வாதம்!

16:48 PM (IST)  •  10 Mar 2023

ஆன்லைன் ரம்மி - இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு

ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி.க்கு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
PM Internship Scheme: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் - உதவித்தொகையுடன் 1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு, விண்ணப்பிப்பது எப்படி?
PM Internship Scheme: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் - உதவித்தொகையுடன் 1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு, விண்ணப்பிப்பது எப்படி?
"நான் நினைச்ச மாதிரி இன்னும் படம் எடுக்கல" ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த லோகேஷ் கனகராஜ்!
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
TVK Vijay: த.வெ.க மாநாட்டிற்கு இடம் பற்றாக்குறை... திணறும் கழக நிர்வாகிகள்... ஸ்தம்பிக்குமா தேசிய நெடுஞ்சாலை?
PM Internship Scheme: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் - உதவித்தொகையுடன் 1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு, விண்ணப்பிப்பது எப்படி?
PM Internship Scheme: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் - உதவித்தொகையுடன் 1.25 லட்சம் பேருக்கு வாய்ப்பு, விண்ணப்பிப்பது எப்படி?
"நான் நினைச்ச மாதிரி இன்னும் படம் எடுக்கல" ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த லோகேஷ் கனகராஜ்!
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
இனிமேல் பிரஸ் ஷோ கிடையாது...பாலிவுட் தயாரிப்பு நிருவனம் எடுத்த அதிரடி முடிவு..கோலிவுட் நிலை என்ன?
Ram Charan : ஆலியா பட் மகள் பெயரில் ராம் சரண் தத்தெடுத்த யானை...இது என்ன வித்தியாசமான பரிசா இருக்கு
Ram Charan : ஆலியா பட் மகள் பெயரில் ராம் சரண் தத்தெடுத்த யானை...இது என்ன வித்தியாசமான பரிசா இருக்கு
Phoenix : சூர்யாவின் கங்குவா படத்துடன் மோதும் விஜய் சேதுபதி மகன்...ஃபீனிக்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
Phoenix : சூர்யாவின் கங்குவா படத்துடன் மோதும் விஜய் சேதுபதி மகன்...ஃபீனிக்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
IND vs BAN: மிரட்டல் சதம்! சாம்சன்தான் முதல் இந்தியர்! புது வரலாறு படைத்தது எப்படி?
Embed widget