![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
![Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி. Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/f335f6362c9bb9412a3adf24b94ba89c1718420296058572_original.jpeg)
Background
- கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற இருக்கிறது.
- 'பசுமை சகாப்தத்தை' உருவாக்க கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என, ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். “செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மூலோபாயத்தை உருவாக்கும் முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவது எங்களின் தீர்மானம். சமூகத்தின் எந்தப் பிரிவினரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதே எங்கள் அர்ப்பணிப்பு" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் நேற்று மாலை 3மணி முதல் சிறுத்தை உலா வந்து கொண்டிருக்கிறது அதனை பிடிக்க திருப்பத்தூர் வனத்துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை!12 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கார் சேட்டில் பதுங்கி இருந்த சிறுத்தையை பத்திரமாக வனத்துறையினர் மீட்டனர்.
40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
40 தொகுதிகளிலும் வென்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் என்று திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பாஜகவால் காலூன்ற முடியாத ஒரே மண் தமிழ் மண் - திருமாவளவன்
மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். அதற்கு முதல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.
நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார் , அண்ணன் ஸ்டாலின் அவர்கள்.
கேரளாவில் ஒரு நடிகரை வைத்து ஒரு இடத்தை பெற்றுள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடு தான்.
எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை
தேசிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து அண்ணன் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.
அண்ணன் ஸ்டாலின் தொடர் வெற்றியை பெற்று வருகிறார். இதற்கு அனைத்து காரணம் அண்ணன் ஸ்டாலின் ஆளுமை தான்.
ஒவ்வொரு தேர்தல் கூட்டணி மாறும் அப்படி பட்ட கூட்டணி தான் அதிமுக பாஜக கூட்டணி..
நான்கு தேர்தல்களை சந்தித்தும் கூட்டணியில் சிதைவு இல்லை.. - திருமாவளவன்
Thuvaram Paruppu Toor Dal : துவரம் பருப்பு கொள்முதல் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பொதுவிநியோகத்திட்டத்தில் எந்த அடிப்படையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. தமிழக மக்கள் மசூர் பருப்பை விட துவரம் பருப்பையே அதிகம் விரும்புகின்றனர். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு வாதம்
தி.மு.க. முப்பெரும் விழாவை காண குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
கோவையில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த கூட்டத்தை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
கன்னட நடிகர் தர்ஷனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
கன்னட நடிகர் தர்ஷனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)