Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
- போலந்து நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ரயில் மூலமாக உக்ரைன் நாட்டுக்கு புறப்பட்டார்
- உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியை சந்திக்கும் பிரதமர் மோடி அவருடன் போர் நிறுத்தம் குறித்தும் பேச உள்ளார்.
- பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 11 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் தங்களது போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
- பெண் மருத்துவர் பாலியன் வன்கொடுமை செய்து கொலை; மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
- ஆந்திராவில் மருத்துவ ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 கோடி நிதி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
- தமிழ்நாட்டில் அடுத்த 2 மாங்களில் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்ப விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி
- தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய் – தொண்டர்கள் உற்சாகம்
- விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானையின் உருவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு
- தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியரை கைது செய்த சுகாதாரத்துறை
- பள்ளி மாணவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதா காவல்துறை? – சிவகங்கையில் பரபரப்பு
- சென்னையில் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே நுழைந்து மாமூல் கேட்ட ரவுடி கைது
- வெம்பக்கோட்டை அகழாய்வில் பவள மணியில் சீறும் காளை கண்டுபிடிப்பு
- பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றம் சாட்டிய வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அகற்றமா? டெல்லி காவல்துறை விளக்கம்
- வெனிசுலா நாட்டு அதிபர் மதுரோ வெற்றி பெற்றது செல்லும் – அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 14 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம்
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 14 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு
பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்பு
பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்பு
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கணவர் மற்றும் பெற்றோர் வசிக்கக்கூடிய பகுதிகளில் பணிபுரியலாம் - சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி!
ரஷ்யா உடனான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, Project BHISHM திட்டத்தின்கீழ் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கூடாரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது
சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து ஓராண்டு நிறைவு
சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பலர் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
அதில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது போன்றும், அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வு செய்வது போன்றும் தத்ரூபமாக செய்திருந்தனர் தனியார் பள்ளி மாணவர்கள். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

