மேலும் அறிய

இரட்டை கோபுர தாக்குதல் போல நடக்கும்... டெல்லி விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் போலவே, லண்டனில் இருந்து டெல்லி வரும் ஏர் இந்தியா விமானம் வெடிக்க வைக்கப்படும் என்று மர்மநபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்த இரட்டை கோபுரத்தின் மீது 2001ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்திற்கு காரணமான ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் தேடிப்பிடித்து பழிதீர்த்தது.

இந்த நிலையில், இன்று இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில், டெல்லியில் உள்ள ரங்கோலா காவல் நிலையத்திற்கு நேற்று இரவு 10.30 மணிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.  அப்போது, காவல்துறையினரிடம் தொலைபேசியில் பேசிய நபர் அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதலைப் போன்று, லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் ஏர் இந்தியா விமானமும் வெடிக்க வைக்கப்படும் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.


இரட்டை கோபுர தாக்குதல் போல நடக்கும்... டெல்லி விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

அந்த அழைப்பு வந்த சற்று நேரத்தில் டெல்லி போலீசாருக்கு மற்றுமொரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் மர்மநபர்கள் டெல்லி விமான நிலையத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இதையடுத்து, உடனே காவல்துறையினர் தங்களது உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி  விமான நிலையத்தில் டெல்லி போலீசாரும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விமான நிலையத்தின் உள்ளேயும், விமான நிலையத்தை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லி போலீசார் பயணிகள் விரைவாக விமான நிலையத்திற்கு வருமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.


இரட்டை கோபுர தாக்குதல் போல நடக்கும்... டெல்லி விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

பாதுகாப்பு கருதி பயணிகள், அவர்களது உடைமை, வாகனங்களின் சோதனைகளுக்காக பயணிகளை விரைந்து விமான நிலையத்திற்கு வருமாறு போலீசார் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக, டெல்லியின் கூடுதல் துணை ஆணையர் பிரதாப் சிங்கும் விமானங்களுக்கு செல்ல உள்ள பயணிகள் விரைந்து விமான நிலையம் வருமாறு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு சோதனைகளில் விரைவாக பங்கேற்று தாமதத்தை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்ட இதே தினத்தில், நாட்டின் தலைநகரான டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி எண்கள் மூலம் மிரட்டல் விடுத்த நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு செய்திகள் படிக்க : கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு.. பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget