மேலும் அறிய

நுபுர் ஷர்மாவை ஆதரித்தவரை கொன்றுவிட்டு 'பிரியாணி பார்ட்டி'...குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்து என்ஐஏ பகீர் தகவல்

கோல்ஹே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு புதிய குற்றவாளிகளும் கொலையைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற பிரியாணி விருந்தில் கலந்துகொண்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

அமராவதியைச் சேர்ந்த மருந்தாளரான உமேஷ் கோல்ஹே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு புதிய குற்றவாளிகளும் கொலையைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற பிரியாணி விருந்தில் கலந்துகொண்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை அமராவதியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான மௌலவி முஷ்பிக் அகமது (41) மற்றும் அப்துல் அர்பாஸ் (23) ஆகியோரை காவலில் வைக்க கோரும் போது என்ஐஏ இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறப்பு நீதிபதி ஏ.கே. லஹோடி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை ஆகஸ்ட் 12 வரை என்ஐஏ காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றத்தைச் செய்த பிற குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க இருவரும் உதவியதாக தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இருவரின் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்குப் பிறகு ஒரு பிரியாணி விருந்து நடத்தப்பட்டது. அதில், முஷ்பீக் மற்றும் அப்துல் ஆகியோர் கலந்து கொண்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

கொலை செய்த பின், அதில் மூளையாக செயல்பட்ட ஷேக் இர்பானை பல முறை தொடர்பு கொண்டு முஷ்பிக் பேசியுள்ளார். இர்பான் நடத்தும் நிறுவனத்தில் அப்துல் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இர்பான், ரஹ்பர் ஹெல்ப்லைன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

காவலில் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் காஷிப் கான், அவர்கள் இருவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொருந்தாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இருவரையும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை என்ஐஏ காவலில் வைக்க உத்தரவிட்டது.

ஜூன் 21 அன்று கிழக்கு மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் கோல்ஹே கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் ஷர்மாவை ஆதரித்து கோல்ஹே சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget