மேலும் அறிய

Bihar Stampede: மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி பலி, நாலந்தா கோயிலில் நேர்ந்த சோகம்

Bihar Stampede News: பீகார் மாநிலம் நாலந்தாவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பெண் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Stampede: நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதல மாதா கோயிலில் நடந்த மதக்கூட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் பலி

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதல மாதா கோயிலில் மதவழிபாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகளவில் பக்தர்கள் கூடியதால், வழிபாட்டின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழப்பமான சூழல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணிகளை தொடங்கினர். சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் அரசும் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாலந்தா கோயிலில் நடந்தது என்ன?

செவ்வாய்கிழமை நாட்களில் வழக்கமாகவே இந்த கோயிலில் அதிகப்படியான கூட்டம் குவியுமாம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக பாட்னாவில் இருந்து கூட பலரும் வந்து இந்த ஆலயத்தில் வழிபட்டு செல்வார்களாம். அந்த வகையில் இன்று காலையில் கூடிய கூட்டத்தை நிர்வகிக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காததே இன்றைய விபத்திற்கு காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர். அதேநேரம், கூடியிருந்தவர்கள் யாரும் வரிசையில் செல்லவில்லை எனவும், விரைந்து சாமி தரிசனம் செய்து விட வேண்டும் என முண்டியடித்ததே காரணம் என்றும் விபத்தின் போது அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர். வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் சைத்ர நவரத்திரியின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று அதிகளவில் பக்தர்கள் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்த அரசு

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் மற்றும் முதலமைச்சர் நிவாரண பிரிவில் இருந்து 2 லட்சம் ரூபாய் என, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார். இதுபோக, பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget