மேலும் அறிய

Bihar Stampede: மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி பலி, நாலந்தா கோயிலில் நேர்ந்த சோகம்

Bihar Stampede News: பீகார் மாநிலம் நாலந்தாவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பெண் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Stampede: நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதல மாதா கோயிலில் நடந்த மதக்கூட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் பலி

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதல மாதா கோயிலில் மதவழிபாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகளவில் பக்தர்கள் கூடியதால், வழிபாட்டின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழப்பமான சூழல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணிகளை தொடங்கினர். சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் அரசும் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாலந்தா கோயிலில் நடந்தது என்ன?

செவ்வாய்கிழமை நாட்களில் வழக்கமாகவே இந்த கோயிலில் அதிகப்படியான கூட்டம் குவியுமாம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக பாட்னாவில் இருந்து கூட பலரும் வந்து இந்த ஆலயத்தில் வழிபட்டு செல்வார்களாம். அந்த வகையில் இன்று காலையில் கூடிய கூட்டத்தை நிர்வகிக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காததே இன்றைய விபத்திற்கு காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர். அதேநேரம், கூடியிருந்தவர்கள் யாரும் வரிசையில் செல்லவில்லை எனவும், விரைந்து சாமி தரிசனம் செய்து விட வேண்டும் என முண்டியடித்ததே காரணம் என்றும் விபத்தின் போது அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர். வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் சைத்ர நவரத்திரியின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று அதிகளவில் பக்தர்கள் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்த அரசு

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் மற்றும் முதலமைச்சர் நிவாரண பிரிவில் இருந்து 2 லட்சம் ரூபாய் என, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார். இதுபோக, பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
Kim Jong Un: ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
Embed widget