மேலும் அறிய

செக் மோசடி வழக்கில் வாரண்ட்.. காங்கிரஸ் பேச்சாளர் நடிகை அமிஷா படேலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

போபாலில் மாவட்ட நீதிமன்றம் நடிகை அமீஷா படேல் மீது செக் மோசடி வழக்கில் வாரண்ட் பிறப்பித்து, உத்தரவிட்டுள்ளது. இவர் மத்தியப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தவர்.

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் மாவட்ட நீதிமன்றம் நடிகை அமிஷா படேல் மீது செக் மோசடி வழக்கில் பிணை வழங்கக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 30 அன்று, போபாலின் மாவட்டம் மற்றும் அமர்வுகளின் நீதிமன்றம் நடிகை அமிஷா மீது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை அமிஷா படேல் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 32.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செக் மோசடி வழக்கில் அமிஷா படேல் மீது தற்போது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு யூ.டி.எஃப் டெலிஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பாக அமிஷா படேல் மீது தொடுக்கப்பட்டுள்ளது. வாரண்ட் பிறப்பித்துள்ளதோடு, வரும் டிசம்பர் 4 அன்று, நடிகை அமிஷா படேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

யூ.டி.எஃப் டெலிஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ரவி பந்த் நீதிமன்றத்தில், நடிகை அமிஷா படேல் தனது நிறுவனமான அமிஷா படேல் ப்ரொடக்‌ஷன் மூலமாக யூ.டி.எஃப் டெலிஃப்லிம்ஸ் நிறுவனத்திடம் புதிய படம் தயாரிப்பதாகக் கூறி, 32.25 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமிஷா படேல் 32.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செக் வழங்கியதாகவும், அது வங்கியில் பவுன்ஸ் ஆனதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

செக் மோசடி வழக்கில் வாரண்ட்.. காங்கிரஸ் பேச்சாளர் நடிகை அமிஷா படேலுக்கு நீதிமன்றம் உத்தரவு!
அமிஷா படேல்

 

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ரவி பந்த், நடிகை அமிஷா படேல் மீது நீதிமன்றம் பிணை பெறக்கூடிய வாரண்ட் பிறப்பித்திருப்பதாகவும், அமிஷா வரும் டிசம்பர் 4 அன்று மாவட்ட நீதிமன்றத்தின் ஆஜராகவில்லை என்றால், அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். 

மேலும், இந்தூரில் நடிகை அமிஷா மீது சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செக் மோசடி செய்தார் என ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பு என்ற பெயரில் இந்தூரைச் சேர்ந்த நிஷா சிப்பா என்பவரிடம் நடிகை அமிஷா படேல் 10 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 அன்று, நிஷாவுக்கு அமிஷா செக் வழங்கியதாகவும், வங்கியில் அந்த செக் பவுன்ஸ் ஆனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செக் மோசடி வழக்கில் வாரண்ட்.. காங்கிரஸ் பேச்சாளர் நடிகை அமிஷா படேலுக்கு நீதிமன்றம் உத்தரவு!
பிரசாரத்தில் அமிஷா படேல்

 

கடந்த 2019ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நீதிமன்றம் செக் மோசடி மற்றும் மோசடி வழக்கில் நடிகை அமிஷா படேல் மீது கைது வாரண்ட் பிறப்பித்தது. சினிமா தயாரிப்பாளர் அஜய் சிங், நடிகை அமிஷா படேலும், அவரது தொழில் பங்குதாரரும் தன்னிடம் இருந்து புதிய திரைப்படத்திற்காக 2.5 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும், படம் 2018ஆம் ஆண்டு வெளியாகும் எனக் கூறி, படத்தை வெளியிடவில்லை எனக் குற்றம் சாட்டியுனார். அதன்பிறகு, நடிகை அமிஷா அவருக்கு அளித்த 3 கோடி ரூபாய்க்கான செக் மீண்டும் பவுன்ஸ் ஆனதாக அஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget