மேலும் அறிய

Hyderabad: இரவு முழுவதும் லாக்கர் அறையில் சிக்கிய முதியவர்! - வங்கி ஊழியர்கள் அலட்சியம்! நடந்தது என்ன?

செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் காலை 10.30 மணியளவில் லாக்கரின் கதவைத் திறந்தபோது கிருஷ்ணா ரெட்டி லாக்கர் அறையில் தரையில் மயங்கி கிடந்துள்ளார்.

ஜூப்ளி ஹில்ஸில் வசிக்கும் 89 வயதான வி கிருஷ்ணா ரெட்டி, கடந்த திங்கள்கிழமை மாலை வங்கிக்கு வந்திருந்தார். அப்பொழுது, அவர் தனது லாக்கரில் உள்ள டெபாசிட்களை சரிபார்க்க லாக்கர் அறைக்குள் நுழைந்தார். சிறிது நேரம் கழித்து, கிருஷ்ணா ரெட்டி திரும்பிப்பார்த்தபோது தான் ஒரு பெரிய இரும்பு லாக்கருக்குள் மாட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அடுத்தநாள் காலை வரை அந்த லாக்கரில் சிக்கி தவித்துள்ளார். 

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை சிறிது சலசலப்புக்குப் பிறகு அந்த முதியவர் மீட்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் காலை 10.30 மணியளவில் லாக்கரின் கதவைத் திறந்தபோது கிருஷ்ணா ரெட்டி லாக்கர் அறையில் தரையில் மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

நீரிழிவு நோயாளியான கிருஷ்ணா ரெட்டியை ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் அவசர பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் குடும்பத்தினர் வந்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில், கிருஷ்ணா ரெட்டி குடும்பத்தாரால் காணாமல் போனோர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் தெரிவித்தனர். “இப்போது வழக்கு முடிக்கப்படும். ஆனால் வங்கி ஊழியர்களுக்கு எதிராக ஐபிசி 336 மற்றும் 342 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வோம்” என்று இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ரெட்டி கூறினார்.


Hyderabad: இரவு முழுவதும் லாக்கர் அறையில் சிக்கிய முதியவர்! - வங்கி ஊழியர்கள் அலட்சியம்! நடந்தது என்ன?

வங்கியின் உதவி மேலாளர் லாக்கர் அறையை மூடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை, வங்கியின் சிசிடிவி கேமராக்களில் அவரது நடமாட்டம் ஏதேனும் பதிவாகி உள்ளதா என்பதைச் சரிபார்க்க குடும்பத்தினருடன் போலீஸாருடன் வங்கிக்குச் சென்றனர்.

இதுகுறித்து வங்கி மேலாளர் முரளிமோகன் ரெட்டி கூறுகையில், மீடியாக்களிடம் பேசுவதை தவிர்க்குமாறு வங்கி உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். விசாரணையில், வங்கியின் உதவி மேலாளர், திங்கள்கிழமை மாலை 4.45 மணியளவில் கிருஷ்ணா ரெட்டியை லாக்கர் அறைக்குள் அனுமதித்திருப்பது தெரியவந்தது. செவ்வாய்கிழமை காலை வங்கி ஊழியர்களில் ஒருவர் திங்கள்கிழமை மாலை ஒரு முதியவர் லாக்கர் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். பின்னர், ஊழியர்கள் லாக்கருக்கு விரைந்து சென்று அதன் கனமான இரும்புக் கதவைத் திறந்து பார்த்தபோது கிருஷ்ணா ரெட்டி தரையில் மயங்கி கிடந்ததைக் கண்டனர்.

முரளி மோகன் ரெட்டி பின்னர் ஒரு தொலைக்காட்சி சேனலிடம், திங்கள்கிழமை முதல் பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, வங்கியின் வழக்கமான ஊழியர்களில் பெரும்பாலோர் வரவில்லை என்றும், “சில மாற்று ஊழியர்கள்” நாள் முடிவில் வளாகத்தை மூடிவிட்டனர் என்றும் கூறினார்.

ஐபிசியின் 336, 342 பிரிவுகள் கூறுவது என்ன..? 

336 - மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல். தண்டனையானது மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது ரூ. 250 வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து இருக்கலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget