மேலும் அறிய

Hyderabad: இரவு முழுவதும் லாக்கர் அறையில் சிக்கிய முதியவர்! - வங்கி ஊழியர்கள் அலட்சியம்! நடந்தது என்ன?

செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் காலை 10.30 மணியளவில் லாக்கரின் கதவைத் திறந்தபோது கிருஷ்ணா ரெட்டி லாக்கர் அறையில் தரையில் மயங்கி கிடந்துள்ளார்.

ஜூப்ளி ஹில்ஸில் வசிக்கும் 89 வயதான வி கிருஷ்ணா ரெட்டி, கடந்த திங்கள்கிழமை மாலை வங்கிக்கு வந்திருந்தார். அப்பொழுது, அவர் தனது லாக்கரில் உள்ள டெபாசிட்களை சரிபார்க்க லாக்கர் அறைக்குள் நுழைந்தார். சிறிது நேரம் கழித்து, கிருஷ்ணா ரெட்டி திரும்பிப்பார்த்தபோது தான் ஒரு பெரிய இரும்பு லாக்கருக்குள் மாட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அடுத்தநாள் காலை வரை அந்த லாக்கரில் சிக்கி தவித்துள்ளார். 

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை சிறிது சலசலப்புக்குப் பிறகு அந்த முதியவர் மீட்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் காலை 10.30 மணியளவில் லாக்கரின் கதவைத் திறந்தபோது கிருஷ்ணா ரெட்டி லாக்கர் அறையில் தரையில் மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

நீரிழிவு நோயாளியான கிருஷ்ணா ரெட்டியை ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் அவசர பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் குடும்பத்தினர் வந்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில், கிருஷ்ணா ரெட்டி குடும்பத்தாரால் காணாமல் போனோர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் தெரிவித்தனர். “இப்போது வழக்கு முடிக்கப்படும். ஆனால் வங்கி ஊழியர்களுக்கு எதிராக ஐபிசி 336 மற்றும் 342 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வோம்” என்று இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ரெட்டி கூறினார்.


Hyderabad: இரவு முழுவதும் லாக்கர் அறையில் சிக்கிய முதியவர்! - வங்கி ஊழியர்கள் அலட்சியம்! நடந்தது என்ன?

வங்கியின் உதவி மேலாளர் லாக்கர் அறையை மூடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை, வங்கியின் சிசிடிவி கேமராக்களில் அவரது நடமாட்டம் ஏதேனும் பதிவாகி உள்ளதா என்பதைச் சரிபார்க்க குடும்பத்தினருடன் போலீஸாருடன் வங்கிக்குச் சென்றனர்.

இதுகுறித்து வங்கி மேலாளர் முரளிமோகன் ரெட்டி கூறுகையில், மீடியாக்களிடம் பேசுவதை தவிர்க்குமாறு வங்கி உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். விசாரணையில், வங்கியின் உதவி மேலாளர், திங்கள்கிழமை மாலை 4.45 மணியளவில் கிருஷ்ணா ரெட்டியை லாக்கர் அறைக்குள் அனுமதித்திருப்பது தெரியவந்தது. செவ்வாய்கிழமை காலை வங்கி ஊழியர்களில் ஒருவர் திங்கள்கிழமை மாலை ஒரு முதியவர் லாக்கர் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். பின்னர், ஊழியர்கள் லாக்கருக்கு விரைந்து சென்று அதன் கனமான இரும்புக் கதவைத் திறந்து பார்த்தபோது கிருஷ்ணா ரெட்டி தரையில் மயங்கி கிடந்ததைக் கண்டனர்.

முரளி மோகன் ரெட்டி பின்னர் ஒரு தொலைக்காட்சி சேனலிடம், திங்கள்கிழமை முதல் பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, வங்கியின் வழக்கமான ஊழியர்களில் பெரும்பாலோர் வரவில்லை என்றும், “சில மாற்று ஊழியர்கள்” நாள் முடிவில் வளாகத்தை மூடிவிட்டனர் என்றும் கூறினார்.

ஐபிசியின் 336, 342 பிரிவுகள் கூறுவது என்ன..? 

336 - மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல். தண்டனையானது மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது ரூ. 250 வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து இருக்கலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget