மேலும் அறிய

Bangladesh Protests: சுமார் 100 பேர் மரணம், வங்கதேசத்தில் காலவரையற்ற ஊரடங்கு - இந்தியர்கள் பயணிக்க எச்சரிக்கை

Bangladesh Protests: இந்தியர்கள் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளாதிர்கள் என, மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

Bangladesh Protests: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள வன்முறையில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை:

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு சீர்திருத்தங்கள் தொடர்பாக வெடித்துள்ள புதிய வன்முறையால்,  அங்கு சுமார் 100 வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியர்கள் வங்கதேசம்  செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அங்குள்ள இந்திய குடிமக்கள் "அதிக எச்சரிக்கையுடன்" செயல்படவும், அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

"தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய பிரஜைகள் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வெளியுறவு அமைச்சக அற்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால், +8801958383679; +8801958383680; +8801937400591 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை:

பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள் என்ற தலைப்பின் கீழ் "ஒத்துழையாமை இயக்கத்தை" மையமாகக் கொண்ட, புதிய போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அததொடர்ந்து,  நாட்டின் பல பகுதிகளில் வெடித்த தொடர்ச்சியான மோதல் சம்பவங்களால் சுமார் 100 பேர் வர உயிரிழந்துள்ளளனர். ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய கலவரத்தின் போது சிராஜ்கஞ்சின் எனயட்பூர் காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலில் 13 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: சாலையில் அசுரனாக காட்சியளிக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் - ரூ.10 லட்சம் பட்ஜெட், டாப் 5 மாடல்கள்

காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு:

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் போராட்டக்காரர்களுக்கும், அவாமி லீக் உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பலர் இறந்தனர். தலைநகர் டாக்காவில், அவாமி லீக் உறுப்பினர்களுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் மாணவர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. 

இதனிடையே, "இப்போது தெருக்களில் போராட்டம் நடத்துபவர்கள் மாணவர்கள் அல்ல, ஆனால் தேசத்தை சீர்குலைக்க முயலும் பயங்கரவாதிகள்" என்று தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டினார். தொடர்ந்து, போராட்டக்காரர்களை "பயங்கரவாதிகள்" என்று கூறிய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், வங்கதேசம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே,  அதிகரித்து வரும் வன்முறையைக் கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி (1200 GMT) முதல், நாடு முழுவதும் காலவரையற்ற  ஊரடங்கு உத்தரவை வங்கதேச உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Embed widget