மேலும் அறிய

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! மண்டல கால கட்டுப்பாடுகள்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சபரிமலை செல்லும் பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு அவசியம். அதில் குறிப்பிட்ட நேரத்தை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் நெரிசல் தவிர்க்கப்படும்.

சபரிமலையில் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவ.16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவ.17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் தொடங்க உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் இவர்களின் பாதுகாப்பு, தரிசனம் மற்றும் உரிய வசதிகளை செய்து தருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான பல்வேறு விதிமுறைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. தரிசனத்துக்கு முன்பதிவு அவசியம். அதில் குறிப்பிட்ட நேரத்தை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் நெரிசல் தவிர்க்கப்படும்.


சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! மண்டல கால கட்டுப்பாடுகள்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

முன்பதிவு செய்யாமல் வரும் அனைவருக்குமே ஸ்பாட் புக்கிங் அளிக்க முடியாது. வரையறை இல்லாத கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த ஆண்டு இந்த விதிமுறை கடுமையாக பின்பற்றப்படும். ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் வரும் வகையில் பயணங்களை திட்டமிடுவது அவசியம். செய்ய வேண்டியவை மலையேறும் போது ஒவ்வொரு 10 நிமிடத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். மரக்கூட்டம், சரம் குத்தி, நடைப்பந்தல் வழியே சந்நிதானம் செல்லவும். பதினெட்டாம் படிக்குச் செல்கையில் வரிசை முறையை பின்பற்றுவது அவசியம்.தரிசனம் முடித்து திரும்பும்போது நடைப் பந்தல் மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். கழிப்பறைகளை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். டோலி தேவைப்படுவோர் தேவசம் கவுண்டரில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாகனம் பழுது, விபத்து, மருத்துவ அவசரம், மிருக ஆபத்து, குற்றம், காணாமல் போனோர் போன்ற அவசர நிலைகளில் 14432 ஹெல்ப் லைன் எண்ணில் போலீசை தொடர்புகொள்ளலாம். பம்பா, சன்னிதானம் மற்றும் யாத்ரிக பாதைகள் சுத்தமாக வைத்திருக்கவும். ஒதுக்கப்பட்ட நிறுத்தும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் கழுத்தில் முகவரி மற்றும் தொடர்பு எண்கொண்ட அடையாள அட்டைகளை அணிவிக்கவும்.


சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! மண்டல கால கட்டுப்பாடுகள்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

கோயில் வளாகத்தில் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. புகைபிடித்தல், மது, புகையிலை உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். வரிசையில் செல்லும் போது ஓட வோ, முண்டியடித்தபடி செல்லவோ கூடாது. ஆயுதங்கள் அல்லது வெடிப்புப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். கழிவுகளை குப்பைத் தொட்டிகளுக்கு வெளியே போடக்கூடாது. பதினெட்டம்படியில் தேங்காய் உடைக்க வேண்டாம். 18ம் படியில் ஏறும் போது மண்டியிட கூடாது. அப்பர் திரு முற்றம் அல்லது தந்த்ரிநாடா பகுதிகளில் ஓய்வெடுக்க வேண்டாம். நடைப்பந்தல் மற்றும் லோயர் திருமுற்றம் பகுதிகளில் பாய், போர்வைகளை விரிக்கக்கூடாது. புனிதமான பம்பையில் ஈர ஆடைகளை விட்டுச் செல்லக் கூடாது. இவ்வாறு தேவசம் போர்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே விதிமுறை முறையாக பின்பற்ற வேண்டும். பக்தர்கள் அடுத்தடுத்து இந்த இடத்தை பயன்படுத்த உள்ளதால் ஒவ்வொரு பக்தரும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். வாகனங்களின் பதிவு எண்ணை மறைத்து எந்தவித அலங்காரமோ, கூடுதல் முகப்பு விளக்குகளையோ பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget