மேலும் அறிய

Arvind Kejriwal: அமலாக்கத்துறை செய்வது சுத்த போக்கிரித்தனம்; ஆம் ஆத்மியை ஒடுக்க நினைக்கும் செயல் - அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருங்கிய வட்டாரத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போக்கிரித்தனம் எனக் கூறியுள்ளார். 

ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில்  சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வரும் நிலையில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். 

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐந்து  முறை சம்மன் அனுப்பியும் இதுவரை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என அமலாத்துறை தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது. வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலில் தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கவே மத்திய அரசின் அழுத்ததினால் அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதுமட்டும் இல்லாமல் அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார். 

இப்படியான நிலையில் டெல்லியில் 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். இதில் ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.,யுமான குப்தா வீட்டிலும், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மற்றும் நெருக்கமானவர்கள் வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்றது. முதலமைச்சருக்கு சொந்தமான மற்றும் நெருங்கிய வட்டாரங்களுக்குச் சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. இந்த திடீர் சோதனை டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த்  கெஜ்ரிவால், 

”இன்று எனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் 23 ED அதிகாரிகள் 16 மணிநேரம் சோதனை நடத்தினர். தீவிர சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் திரும்பிச் சென்றுள்ளனர். இன்னும் சொல்லப்போனால்  ஒரு பைசா கூட  அமலாக்கத்துறையினருக்கு கிடைக்கவில்லை. நகைகள் உள்ளிட்ட எந்த வகையான பொருட்களோ ஆவணங்களோ அமலாக்கத்துறையினருக்கு கிடைக்கவில்லை.  மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.

அமலாக்கத்துறையினர் சத்யேந்திர ஜெயின் இடத்தில் சோதனை நடத்தினர், அங்கு எதுவும் கிடைக்கவில்லை.  சஞ்சய் சிங்கின் இடத்தை சோதனை செய்தனர், அங்கு எதுவும் கிடைக்கவில்லை. எந்த காரணமும் இல்லாமல் அமலாக்கத்துறை யாருடைய வீட்டிற்கும் நுழைய முடியுமா? இது சுத்த போக்கிரித்தனம் இல்லையா? இந்த ரெய்டுகள், கைதுகள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும், எங்களை தொந்தரவு செய்வதற்காகவும், ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதற்காகவும் மட்டுமே செய்யப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு புதிய பைசா அல்லது எந்த ஆதாரமும் அமலாக்கத்துறைக்கு கிடைக்கவில்லை. இந்த நாடு சட்டம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது. இந்தியா யாருடைய வாரிசும் அல்ல. இந்த நாட்டில் 140 கோடி மக்கள் உள்ளனர். இதுபோன்ற துரோகத்தை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget