மேலும் அறிய

Terrorist Killed: ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத நடவடிக்கைகள்.. ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதிகளில் ஒருவரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை,  இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சுட்டுக் கொன்றது. துப்பாக்கிச் சண்டையின் போது ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் சம்பவ இடத்தில் இருந்து இன்னும் மீட்கப்படவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இருக்கும் திக்வார் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்வதாக தகவல் கிடைத்த நிலையில், ராணுவத்தினர் விரைந்து செயல்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பதுங்குயிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒரு பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திக்வார் பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று இதேபோன்ற ஒரு சம்பவத்தில், இந்திய இராணுவமும் குப்வாரா காவல்துறையும் தங்தார் செக்டரில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். தங்தார் செக்டாரில் உள்ள அம்ரோஹி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்திய ராணுவமும் குப்வாரா காவல்துறையும் இணைந்து ஊடுருவல் முயற்சிகள் குறித்த தகவலின் அடிப்படையில் தக்கேன் - அம்ரோஹி பகுதியில் கூட்டு தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். குப்வாரா காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு வழியாக ஊடுருவ முயற்சி செய்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், மேலும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்” தெரிவித்தார்.  

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஜம்மு காஷ்மீரில் ஒரு பெரிய தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற 2-வது ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Smriti Mandhana: ஸ்மிரிதி மந்தனா அப்பாவுக்கு என்னதான் பிரச்சினை? மருத்துவர் சொல்வது என்ன?
Smriti Mandhana: ஸ்மிரிதி மந்தனா அப்பாவுக்கு என்னதான் பிரச்சினை? மருத்துவர் சொல்வது என்ன?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Embed widget