மேலும் அறிய

விமானத்தில் கோளாறு இல்லை.. எல்லாம் சரியாக இருந்தது.. ஏர் இந்தியா CEO புது விளக்கம்

விமானத்தின் பராமரிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. விமானம் மற்றும் என்ஜின்கள் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டன. புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என காம்பெல் தெரிவித்தார்

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் எந்த இயந்திரக் கோளாறும் இல்லை. விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் எந்தக் கோளாறும் கண்டறியப்படவில்லை' என்று அகமதாபாத் விமான விபத்து குறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் கூறியுள்ளனர்.

விமானத்தில் கோளாறு இல்லை:

அகமதாபாத் பேரழிவு குறித்து, ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் கூறுகையில், 'போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் பராமரிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. விமானம் மற்றும் என்ஜின்கள் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டன. புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை. AI-171 விமானத்தில் உள்ள அனைத்தும் 2023 இல் சரிபார்க்கப்பட்டன. விமானத்தின் வலது எஞ்சின் 2023 இல் சரிபார்க்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ட்ரீம்லைனரின் இடது எஞ்சினும் சரிபார்க்கப்பட்டது. இந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் சரிபார்க்கப்பட இருந்தது' என்று ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

விமானங்கள் ரத்து: 

போயிங் 787 மற்றும் 777 விமானங்களில்  விமானப் பயணத்திற்கு முந்தைய பாதுகாப்பு சோதனைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, ஜூன் 20 முதல் ஜூலை  வரை ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவைகளில் தற்காலிகமாக 15 சதவீதம் குறைப்பு செய்வதாகவும் கேம்பல் வில்சன் அறிவித்தார் .

விபத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) ஆய்வுகளுக்கு உத்தரவிட்டது. ஏர் இந்தியாபோயிங் 787 விமானங்களின் மொத்த விமானங்களும் இதில் அடங்கும். 33 விமானங்களில் 26 விமானங்கள் பாதுகாப்பு சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளன. மீதமுள்ளவை மீண்டும் சேவையில் நுழைவதற்கு முன்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அடையாளம் காணப்படும் உடல்கள்:

ஏர் இந்தியா 171 விமான விபத்து சம்பவத்தில் இதுவரை 222 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்தார்.

முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்:

இந்த துயர சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கைக்காக விமான நிறுவனமும்  விமானப் போக்குவரத்துத் துறையும் காத்திருக்கின்றன என்று ஏர் இந்தியா தலைமை கேம்பெல் வலியுறுத்தினார். இது குறித்து பேசிய அவர் "இந்த இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன," என்று வில்சன் கூறினார், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் விசாரணையின் போது அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget