மேலும் அறிய

"இந்துக்களுக்கு எதிராக பேசிய ஓவைசியிடம் பதவி ஏற்கனுமா" கொந்தளித்த பாஜக எம்எல்ஏக்கள்

இடைக்கால சபாநாயகரான ஏஐஎம்ஐஎம் கட்சியின் அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். துணை முதலமைச்சராக மல்லு பாட்டி விக்ரமர்க்காவும் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டியும் அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்கள்.

புதிய சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்எல்ஏக்கள்:

அமைச்சர்களை தொடர்ந்து எம்எல்ஏக்களின் பதவியேற்பு நடைபெற உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இடைக்கால சபாநாயகரான ஏஐஎம்ஐஎம் கட்சியின் அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால சபாநாயகரே, புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த நபரின் (அக்பருதீன் ஓவைசியிடம்) முன்பு பதவி ஏற்கனுமா? என பாஜக எம்எல்ஏ ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ மெசேஜில், "அவர் உயிருடன் இருக்கும் வரை சத்தியப்பிரமாணம் செய்ய மாட்டேன். முழு நேர சபாநாயகரை நியமித்த பின்னரே பதவி பிரமாணம் எடுத்து கொள்வேன். கடந்த காலங்களில் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒருவர் (அக்பருதீன் ஓவைசி) முன் நான் சத்தியப்பிரமாணம் எடுத்து கொள்ள வேண்டுமா?" என்றார். 

இடைக்கால சபாநாயகராக ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு:

இது தொடர்பாக பேசிய தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, "இடைக்கால சபாநாயகராக மூத்த எம்எல்ஏவை நியமிக்கும் மரபுக்கு எதிரானது என்பதால், ஓவைசியின் நியமனத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால சபாநாயகர் முன்பு பதவியேற்பதை பாஜக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கள்ளனர்.  சபாநாயகர் நியமிக்கப்பட்ட பிறகு எங்கள் எம்எல்ஏக்கள் பதவியேற்பார்கள். அத்தகைய கட்சியுடன் (ஏஐஎம்ஐஎம்) நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்" என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அப்போது, பாஜக சார்பில் வெற்றி பெற்ற ராஜா சிங்கும், இடைக்கால சபாநாயகர் முன்பு பதவியேற்று கொள்வதை புறக்கணித்தார். அந்த சமயமும், இடைக்கால சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டார். இப்போது, நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை கைப்பற்றியது.

வழக்கமாக மூத்த சட்டப்பேரவை உறுப்பினரே இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவார்கள். ஆறாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக அக்பருதீன் ஓவைசி தேர்வாகியுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்திலும் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.                              

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget