மேலும் அறிய

காயத்ரி மந்திரம் கொரோனா நோயாளிகளுக்கு குணமளிக்குமா! ஆய்வுசெய்ய ரிஷிகேஷ் எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு..

காயத்ரி மந்திரம் எவ்வாறு கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் என்பது தொடர்பான ஆய்வை எய்ம்ஸ் ரிஷிகேஷ் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக  பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது அலையின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் திணறி வருகின்றனர். அத்துடன் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா மூச்சு பயிற்சி எவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்பது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்விற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு ரிஷிகேஷ் பகுதியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

இதில் 20 கொரோனா நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேருக்கு வெறும் மருத்துவ சிகிச்சையும், மீதமுள்ள 10 பேருக்கு மருத்துவ சிகிச்சையுடன் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 10 நோயாளிகளும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் ஒரு மணி நேரம் காயத்ரி மந்திரம் சொல்லியும் பிராணயாமா செய்தும் வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா எவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு பயன் அளித்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


காயத்ரி மந்திரம் கொரோனா நோயாளிகளுக்கு குணமளிக்குமா! ஆய்வுசெய்ய ரிஷிகேஷ் எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு..

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தொற்று நோய் மருத்துவர் மற்றும் இயக்குநர் ரன்தீப் குலேரியா, "மூச்சு பயிற்சிகள் தொற்று அல்லாத நோய்களுக்கு நல்ல முன்னேற்றம் தரும். ஆனால் கொரோனா தொற்று போன்ற வைரஸ் நோய்களுக்கு இந்த பயிற்சி பெரியளவில் பலனை அளிக்க வாய்ப்பு குறைவு தான்" எனத் தெரிவித்துள்ளார்.  

அதேபோல் பல்வேறு மருத்துவர்களும் இதே கருத்தை தான் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு அதை சரி செய்யாமல் இந்த மாதிரியான ஆய்விற்கு நிதி அளித்து வருவது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்த சமயத்தில் இதுபோன்ற அறிவியல் சாராத ஆய்வுகளுக்கு மத்திய அரசு ஏன் இந்த நேரத்தில் ஆய்வு செய்து வருகிறது என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். 

முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு 'பிராண வாயு' என்ற வென்டிலேட்டர்களை தயாரித்து எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனை அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்த மாதிரியான ஆய்வுகளை செய்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget