மேலும் அறிய

காயத்ரி மந்திரம் கொரோனா நோயாளிகளுக்கு குணமளிக்குமா! ஆய்வுசெய்ய ரிஷிகேஷ் எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு..

காயத்ரி மந்திரம் எவ்வாறு கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் என்பது தொடர்பான ஆய்வை எய்ம்ஸ் ரிஷிகேஷ் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக  பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது அலையின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் திணறி வருகின்றனர். அத்துடன் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா மூச்சு பயிற்சி எவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்பது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்விற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு ரிஷிகேஷ் பகுதியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

இதில் 20 கொரோனா நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேருக்கு வெறும் மருத்துவ சிகிச்சையும், மீதமுள்ள 10 பேருக்கு மருத்துவ சிகிச்சையுடன் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 10 நோயாளிகளும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் ஒரு மணி நேரம் காயத்ரி மந்திரம் சொல்லியும் பிராணயாமா செய்தும் வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா எவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு பயன் அளித்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


காயத்ரி மந்திரம் கொரோனா நோயாளிகளுக்கு குணமளிக்குமா! ஆய்வுசெய்ய ரிஷிகேஷ் எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு..

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தொற்று நோய் மருத்துவர் மற்றும் இயக்குநர் ரன்தீப் குலேரியா, "மூச்சு பயிற்சிகள் தொற்று அல்லாத நோய்களுக்கு நல்ல முன்னேற்றம் தரும். ஆனால் கொரோனா தொற்று போன்ற வைரஸ் நோய்களுக்கு இந்த பயிற்சி பெரியளவில் பலனை அளிக்க வாய்ப்பு குறைவு தான்" எனத் தெரிவித்துள்ளார்.  

அதேபோல் பல்வேறு மருத்துவர்களும் இதே கருத்தை தான் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு அதை சரி செய்யாமல் இந்த மாதிரியான ஆய்விற்கு நிதி அளித்து வருவது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்த சமயத்தில் இதுபோன்ற அறிவியல் சாராத ஆய்வுகளுக்கு மத்திய அரசு ஏன் இந்த நேரத்தில் ஆய்வு செய்து வருகிறது என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். 

முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு 'பிராண வாயு' என்ற வென்டிலேட்டர்களை தயாரித்து எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனை அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்த மாதிரியான ஆய்வுகளை செய்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget