மேலும் அறிய

AIIMS issues new guidelines: கருப்புப் பூஞ்சைத்தொற்று : ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி? - எய்ம்ஸ்

கருப்புப் பூஞ்சை பாதிப்பை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிட மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது...

கொரோனா வார்டுகளில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு இருக்கிறதா? ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது எய்ம்ஸ்
 
கருப்புப் பூஞ்சை பாதிப்பை அறிவிக்கப்படவேண்டிய நோயாக பட்டியலிட மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், கொரோனா வார்டுகளில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆரம்ப நிலையிலே கண்டறிவதற்கான வழிகாட்டு நெறிமுகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவு வெளியிட்டிருக்கிறது.
 
கொரோனா சிகிச்சை வார்டில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஹை ரிஸ்க் கொண்டவர்கள் யார்?
 
கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஸ்டீராய்டு மருந்த்து செலுத்தப்பட்டவர்கள், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இந்தத் தொற்று ஏற்படக் கூடிய ஹை ரிஸ்க் பட்டியலில் இருப்பவர்கள். ஆகையால் அவர்களிடம் ஏதேனும் அறிகுறி தெரிகிறதா எனத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
 
கண்காணிப்பட வேண்டிய நோயாளிகள் எவர்?
 
* கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் கொண்டவர்கள், டயபட்டீஸ் கீட்டோசிடோசிஸ் இருக்கும் ஸ்டீராய்டு அல்லது டோசிலிசுமாப் செலுத்தப்பட்ட நோயாளிகள்.
 
* புற்றுநோய் சிகிசையில் இருப்பவர்கள் அல்லது நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
 
* நீண்ட காலமாக ஸ்டீராய்டு அல்லது டோசிலிசுமாப் மருந்து எடுத்துக் கொள்பவர்கள்.
 
* தீவிர கரோனா தொற்றாளர்கள்.
 
* ஆக்சிஜன் உதவி, மாஸ்க், வெண்டிலேட்டரில் இருப்பவர்கள்
 
ஆகியோரை கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா எனத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு எய்ம்ஸ் வழிகாட்டியுள்ளது.
 
இத்தகைய நோயாளிகளை கண்நோய் சிகிச்சை நிபுணர்கள் வாரம் ஒருமுறையேனும் சோதித்து ஏதேனும் தேவையற்ற திரவ வெளியேற்றம் இருக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். நோயாளிகள் கரோனாவிலிருந்து குணமடைந்த பின்னரும் ஒவ்வொரு 2 முதல் 6 வாரங்களுக்குள் ஒரு முறை என மூன்று மாதங்கள் வரை கண்காணிக்க வேண்டும்.
 
நோயாளிகளும் அவர்களின் உதவியாளர்களும் கவனிக்க வேண்டியது என்ன?
 
கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுத்துகிறதா என சுய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நோயாளிகள் கவனத்திற்கு..
 
 * மூக்கிலிருந்து கருப்பு நிற திரவம் அல்லது ரத்தம் கசிதல் 
 
* மூக்கடைப்பு 
 
* தலைவலி அல்லது கண்களில் வலி 
 
* கண்களைச்சுற்றி வீக்கம். பார்வை இரண்டாகத் தெரிதல், கண்கள் சிவத்தல், பார்வை இழப்பு, கண்களை மூடுவதில் சிக்கல், கண்களைத் திறப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள்.  
 
* முகத்தில் மதமதப்பு அல்லது கூச்ச உணர்வு ஏற்படுதல், உணவு உண்ண வாயைத் திறப்பதில் சிரமம், உணவை மென்று சுவைப்பதில் சிரமம். 
 
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவர்கள் மருத்துவர்களை நாட வேண்டும். காது, மூக்கு, தொண்டை நிபுணர் அல்லது கண் நோய் சிகிச்சை நிபுணரை அணுகலாம். மிக முக்கியமான விஷயம் அறிகுறிகள் கொண்டோர் தாமாகவே ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், ஆன்ட்டிஃபங்கல் மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget