![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Agnipath Recruitment: ஜூன் 24-ல் தொடங்கும் அக்னிபத் விமானப் படை ஆட்சேர்ப்பு: என்ன உடற்தகுதி, படிப்பு?- முழு விவரம்
Agneepath Air Force Recruitment 2022: அக்னிபத் திட்டத்தின் விமானப் படை ஆட்சேர்ப்புக்கு என்னென்ன கல்வி மற்றும் உடற்தகுதி தேவை என்று பார்க்கலாம்.
![Agnipath Recruitment: ஜூன் 24-ல் தொடங்கும் அக்னிபத் விமானப் படை ஆட்சேர்ப்பு: என்ன உடற்தகுதி, படிப்பு?- முழு விவரம் Agnipath Indian Air Force Recruitment 2022 From June 24 Check eligibility salary education qualification other details agneepath IAF Agnipath Recruitment: ஜூன் 24-ல் தொடங்கும் அக்னிபத் விமானப் படை ஆட்சேர்ப்பு: என்ன உடற்தகுதி, படிப்பு?- முழு விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/19/3259d0da98f4c078ed3097e757d33f74_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அக்னிபத் திட்டத்தின் விமானப் படை ஆட்சேர்ப்பு ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்னென்ன, கல்வி மற்றும் உடற்தகுதி தேவை என்று பார்க்கலாம்.
இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி
அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர்.
இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.
பற்றி எரியும் போராட்டங்களுக்கு மத்தியில், அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ததற்காகப் பிரதமர் மோடிக்கு, அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு அக்னி பாதை திட்டத்தின்கீழ் ஜூன்24ஆம் தேதி தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வயது வரம்பு என்ன?
17.5 வயது முதல் 21 வயது வரை (இந்த ஆண்டு 23 வயது)
கல்வித் தகுதி
ஏற்கெனவே அமலில் உள்ள கல்வித் தகுதி, உடல் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். விமானப் படை தேவைப்பட்டால் கூடுதல் கல்வித் தகுதிகள் மற்றும் பிற தகுதிகள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடும்.
என்ன ஊதியம்?
முதல் ஆண்டில் சம்பளமாக ரூ.30,000 (பிடித்தம் போக ரூ.21,000), 2 ஆம் ஆண்டில் ரூ.33 ஆயிரம் (பிடித்தம் போக ரூ.23,100), 3 ஆம் ஆண்டில் ரூ.36,500 (பிடித்தம் போக ரூ.25,580), 4 ஆம் ஆண்டில் ரூ.40,000 (பிடித்தம் போக ரூ.28,000) வழங்கப்படும். பிடித்தம் செய்யப்படும் ரூ.5.02 லட்சம் சேவா நிதிக்கு செல்லும். அதே அளவு நிதியை மத்திய அரசும் செலுத்தும். இதன்மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் வழங்கப்படும்.
பிற பயன்கள் என்ன?
பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/861_1_Terms_and_Conditions_for_Agnipath_Scheme.pdf
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)