மேலும் அறிய

''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் முறைகேடு என்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் பவன் பாண்டே ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நீண்ட நாட்களாக ராமர் கோவில் விவகாரம் 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முடிவிற்கு வந்தது. அந்தத் தீர்ப்பின்படி அயோத்தில் ராமர் கோவில் கட்ட நிலம் கையகப்படுத்தி பணிகளை மேற்கொள்ள ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை என்று ஒன்று நிறுவப்பட்டது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ராம் ஜன்ம பூமி அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராய் மற்றொரு உறுப்பினர் அனில் மிஸ்ராவின் உதவியுடன் கடந்த மார்ச் 18ஆம் தேதி 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். மேலும் அயோத்தியில் இருக்கும் அந்த இடத்தை அதே நாளில் மாலை 5.11 மணிக்கு ஒருவர் 2 கோடிக்கு ரூபாய்க்கு சுல்தான் அன்சாரி என்பவர் வாங்கியுள்ளார். அவருடமிருந்து 5.22 மணிக்கு ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அந்த நிலம் 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  மத்திய அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றை கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தவேண்டும். இதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டும். ராமர் பெயரை கூறி இது மாதிரி முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டை அளிக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார். 


'10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!

இதே குற்றச்சாட்டை சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ பவன் பாண்டே,"2 கோடி ரூபாய்கு வாங்கப்பட்ட நிலம் எப்படி 10 நிமிடங்களில் 18.5 கோடி ரூபாயாக உயர்ந்தது. இப்படி உடனடியாக அதிகரிக்க அதில் என்ன தங்கமாக இருந்தது. இந்த நிலம் வாங்கும் போது அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்தியா ஆகியோரும் உடன் இருந்தனர்" எனக் கூறியுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, "பல கோடி மக்கள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்து பணத்தை ராமருக்கு கோவில் கட்ட அளித்துள்ளனர். அந்தப் பணத்தை வைத்து முறைகேடு செய்வதா. இது அவர்களின் நம்பிக்கைக்கு செய்யப்படும் மிகப் பெரும் துரோகம்" எனத் தெரிவித்துள்ளார். 

இந்த முறைகேடு புகார் தொடர்பாக ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்பு பலரும் அயோத்தில் நிலம் வாங்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு நிலத்தில் விலை சற்று அதிகரித்துள்ளது. எனினும் நாங்கள் ராமர் கோவில் கட்ட வாங்கிய நிலங்கள் அனைத்தின் விலையும் சந்தை விலையைவிட மிகவும் குறைவு தான். மேலும் இந்த நிலம் வாங்கும் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் தான் செய்யப்படுகிறது. அத்துடன் பணம் அளிப்பதும் வங்கிகள் மூலமாகவே நடைபெறுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: பீகாரில் அரசியல் சலசலப்பு.. லோக் ஜனசக்தி கட்சியில் சிக்கல்: சிராக் பஸ்வான் நீக்கமா?

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget