மேலும் அறிய

வேலைக்காரர்களின் பேராசை... பட்டினி போட்டு ஓனர் கொலை.. மகளின் நிலை பரிதாபம்!

ஓம் பிரகாஷ் முதுமையை எட்டிய நிலையில் அவரையும், மகள் ரஷ்மியையும் வீட்டின் கீழே ஒரு அறையில் அடைத்து வந்தனர். ஓம் பிரகாஷுக்கும் ரஷ்மிக்கும் சரியான உணவு மற்றும் பராமரிப்பு மறுக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வீட்டில் வேலை செய்யும் தம்பதியினர், அதன் உரிமையாளரை பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாம் என்ன நடந்தது எனப் பார்க்கலாம். 

இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் தான் நடைபெற்றுள்ளது. அங்கு ஓம் பிரகாஷ் சிங் ரத்தோர் என்ற 70 வயது நபர் தனது 27 வயது மகள் ரஷ்மியுடன் வசித்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு ஓம் பிரகாஷின் மனைவி காலமானார். இப்படியான நிலையில் அப்போது ரஷ்மி சிறுமி என்பதால் தனியாக வைத்துக் கொண்டு ஓம் பிரகாஷ் மிகுந்த சிரமம் கொண்டுள்ளார். 

அவருக்கு சமைக்கவும் தெரியாததால் தங்கள் இருவரையும் கவனித்துக் கொள்ள ராம் பிரகாஷ் குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி ராம் தேவி என்ற தம்பதியினரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். பின்னர் அந்த தம்பதியினர் முதலில் பரிதாபத்தின் பேரில் உதவி செய்ய உள்ளே வந்தனர். ஆனால் படிப்படியாக அந்த வீட்டில் அதிகாரம் செய்ய தொடங்கினர். ஓம் பிரகாஷ் மற்றும் ரஷ்மிக்கு உதவ அவர்கள் வீட்டின் மாடியில் வசித்திருக்கின்றனர். 

தொடர்ந்து ஓம் பிரகாஷ் முதுமையை எட்டிய நிலையில் அவரையும், மகள் ரஷ்மியையும் வீட்டின் கீழே ஒரு அறையில் அடைத்து வந்தனர். ஓம் பிரகாஷுக்கும் ரஷ்மிக்கும் சரியான உணவு மற்றும் பராமரிப்பு மறுக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் காண யாராவது குடும்ப உறவினர்கள் வந்தால் அவர்கள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என கூறி திருப்பி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் டிசம்பர் 29ம் தேதி ஓம் பிரகாஷ் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ராம் பிரகாஷ் குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி ராம் தேவி தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓம் பிரகாஷின் சகோதரர் அமர் சிங் பிரகாஷ் கண்ட காட்சி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அதாவது மரணமடைந்த ஓம் பிரகாஷ் எலும்புக்கூடான நிலையிலும், ரஷ்மியும் அதே நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்துள்ளார். ஓம் பிரகாஷின் உடல் கடுமையாக மெலிந்த நிலையில் இருந்தது. அதேசமயம் ரஷ்மி நிர்வாணமாகவும், எலும்புக்கூடு நிலையில் ஒரு இருண்ட அறையில் காணப்பட்டார். 

அவர் பசியின் கொடுமையால் பாதிக்கப்பட்டு ஒரு 80 வயது மூதாட்டி போல காட்சியளித்தார். அவரின் உடலில் சதை இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. குஷ்வாஹா மற்றும் அவரது மனைவியின் சொத்து மற்றும் வங்கி சேமிப்பு மீதான பேராசையே இருவரும் இப்படி இருக்கக் காரணம் என அமர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு ச்செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Embed widget