மேலும் அறிய

Sabarimala: சபரிமலையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி!

தொடர்ச்சியாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தொடங்கி 10 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் நிலைமை மோசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயில்

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் சீசன் காலமாகும். இந்த காலக்கட்டத்தில் 48 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். பிற மாதங்களில் தமிழ் மாதத்தின் முதல் நாள் தொடங்கி 5 நாட்கள் மட்டுமே நடை திறக்கப்படும். இப்படியான நிலையில் மண்டல விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. 

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம் 

அன்று தொடங்கி தொடர்ச்சியாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தொடங்கி 10 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் பக்தர்களின் தலைகளாக இருப்பதால் ஒதுங்க கூட இடமின்றி கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தயவு செய்து குழந்தைகள், முதியவர்களை சபரிமலைக்கு அழைத்து வர வேண்டாம் என அங்கு தரிசனம் செய்த பக்தர்கள் வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

மாரடைப்பால் பெண் பலி

இந்த நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்ய வந்த கோழிக்கோடி மாவட்டம் கொய்லாண்டியைச் சேர்ந்த சதி என்ற 60 வயது பெண்மணி கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறிய நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அப்பாச்சி மேடு பகுதியில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக கூட்டம் அதிகரிப்பதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். பம்பை நதியில் இருந்து கன்னிமூல கணபதி கோயில் வரை உள்ள மேம்பால பகுதியில் பக்தர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பக்தர்கள் முன்னோக்கி செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனிடையே பல இடங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலை சன்னிதானம் நோக்கி செல்வதால் பெருங்குழப்பம் நிலவுவதாக சபரிமலை காவல்துறை தலைவர் எஸ். ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். எனவே அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். 

மோசமான முன்னேற்பாடு பணிகள் 

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் முறை மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு செய்த மோசமான முன்னேற்பாடு பணிகள் தான் இப்படி சபரிமலையில் பக்தர்கள் சிரமங்களை சந்திக்க காரணம் என்ற குற்றச்சாடு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Embed widget