மேலும் அறிய

திருட்டுப்பட்டம் கட்டிய பெண் காவல் அதிகாரி: நஷ்டயீடாக ரூ.50 லட்சம் கோரிய 8 வயது சிறுமி

திருட்டுப் பட்டம் கட்டிய பெண் காவல் அதிகாரி நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் கோரியுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தில் அச்சிறுமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

திருட்டுப் பட்டம் கட்டிய பெண் காவல் அதிகாரி நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் கோரியுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தில் அச்சிறுமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தானும், தனது தந்தையும் சேர்ந்து செல்போனை திருடிவிட்டதாக பெண் காவல் அதிகாரி ஒருவர் பொது இடத்தில் வைத்துத் தங்களை அவமானப்படுத்தியதற்காக அந்த நஷ்ட ஈடை வழங்க வேண்டும் என்று அந்தச் சிறுமி கோரியுள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்தது என்பதால், நான் பலமுறை மனநல ஆலோசனைக்குச் சென்றேன். இருந்தும் கூட மக்கள் கூடியிருந்த பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம். அதுவும் திருட்டுப் பட்டம் கட்டியதை மறக்க முடியவில்லை என்று அச்சிறுமி கூறியுள்ளார்.

நடந்தது என்ன?

கடந்த ஆகஸ்ட் மாதம், 27 ஆம் தேதியன்று, அட்டிங்கால் அருகே இஸ்ரோ மையத்துக்கு உதிரிபாகங்களை எடுத்துச் செல்லும் ராட்சத வாகனம் வந்தது. அதை வேடிக்கைப் பார்க்க அப்பகுதி மக்கள் எல்லோரும் கூடியிருந்துள்ளனர்.
அதேபோல், ஜெயச்சந்திரனும் (38) அவரது 8 வயது மகளும் அங்கே வேடிக்கைப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கே காவல் பணியில் இருந்த ரெஜிதா, திடீரென தனது மொபைல் போனை காணவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அவர், அருகிலிருந்து ஜெயந்திரனையும் அவரது 8 வயது மகளையும் சந்தேகப்பட்டு பேசியுள்ளார். ஜெயச்சந்திரன் போனை எடுத்து மகளிடம் கொடுத்து ஒழித்துவைத்ததாகக் கூறினார். ஆனால், ஜெயச்சந்திரனும் அவரது மகளும் திருடவில்லை என மன்றாடினர். ஆனால் அந்த காவல் அதிகாரியோ தொடர்ந்து அவதூறாகப் பேசி இருவரையும் அவமானப்படுத்தினர். பின்னர் ஒருக்கட்டத்தில் அவருடைய செல்போன் அவருடைய போலீஸ் வாகனத்திலேயே இருப்பதை உணர்ந்தார். ஆனால் அதன்பின்னர் ஒரு சிறு மன்னிப்பு கூட கோராமல் அவர் அங்கிருந்து சென்றார்.

நடந்த சம்பவத்தை கூட்டத்தின் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்தார். அந்த ஆவணத்தை சாட்சியாக வைத்தே இப்போது சிறுமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, ஜெயச்சந்திரன் காவல்துறை தலைவர் அனில் காந்தை சந்தித்து, ரெஜிதா மிது நடவடிக்கை எடுக்கக் கோரினார். அனில் காந்த் தென் மண்டல ஐஜி ஹர்ஷிதா அட்டலூரிக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். விசாரணைக்குப் பின்னர் ரெஜிதாவை பணியிட மாற்றம் செய்து ஐஜி உத்தரவிட்டார். ஆனால் அந்த பணியிட மாற்றம் ரெஜிதாவுக்கு தண்டனையாக இல்லை மாறாக அவர் நீண்ட காலமாக மாற விரும்பிய இடமாகவே அமைந்தது. 

இதனால், மனமுடைந்த ஜெயச்சந்திரன் குடும்பம் கடந்த செப்டம்பர் மாதம் கேரள தலைமைச் செயலகம் முன் அமர்ந்து தர்ணா செய்தது. அதுவும் கண்டு கொள்ளப்படாத சூழலில், ஜெயச்சந்திரன் குடும்பம் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget