மேலும் அறிய
7 AM Headlines: உங்களைச் சுற்றி நடந்ததை ஒரு நிமிடத்தில் அறிய வேண்டுமா..? காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

காலை 7 மணி தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு:
- சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்
- 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 9ம் தேதி பேரவை தொடங்குகிறது- சபாநாயகர் அப்பாவு தகவல்
- விடுமுறை முடிந்து சென்னை வரும் பயணிகளிடம் 3 மடங்கு கட்டணம் வசூல்: ஆம்னி பஸ் கொள்ளையால் பொதுமக்கள் அதிர்ச்சி
- அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
- நவீன முறையை பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்: அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
- தமிழ்நாட்டில், கொரோனா தொற்று தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு
- சாதி, வருவாய் தொடர்பான சான்றிதழ்களை பயனாளர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29 ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- ஜிஎஸ்டியில் உரிய இழப்பீடு கோரியும் செஸ் வரியை காரணம் காட்டி மறுக்கப்படும் மாநில பங்களிப்பு: சிஏஜி அறிக்கையால் அம்பலமான பகீர் தகவல்
- வங்கி ‘லாக்கரை’ புதுப்பிக்க ஜனவரி 1ம் தேதி வரை கெடு: புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
- இந்திய ராணுவத்தை ராகுல் சிறுமைப்படுத்த வேண்டாம்- மத்திய அமைச்சர் கடும் தாக்கு
- வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அட்மிட்
- உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார்.." பிரேத பரிசோதனை அறை ஊழியர் அதிர்ச்சி தகவல்
- குளிர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
உலகம்:
- தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபாவால் ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உக்ரைனின் பாதுகாப்பு படையின் வலிமையை மேம்படுத்துவதற்காக ரூ.1.8 பில்லியன் டாலர் ஆயுத உதவிகளை அமெரிக்க அறிவித்தது.
- அமெரிக்காவை நிலைகுலையச் செய்த பனிப்புயலால் 31 பேர் உயிரிழப்பு.
- நேபாளத்தின் நாட்டின் புதிய பிரதமராக பிரசாந்தா மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
விளையாட்டு:
- 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோகித் ஷர்மா மற்றும் கே. எல். ராகுலுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என தகவல்
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக தொடர்நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை தமிழக வீரர் அஸ்வின் நெருங்கியுள்ளார்.
- 2022ம் ஆண்டு அனைத்து பார்மேட்களையும் சேர்த்து இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் உள்ளார்.
- ஐந்து பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக் குழுவிற்கு MS தோனி, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் பெயர்களில் போலியாக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion