மேலும் அறிய

கார்களில் கட்டாயமாக 6 ஏர்பேக்.. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு

இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்தார்

இந்தியாவில் பயணிகள் கார்களுக்கான ஆறு ஏர்பேக் பாதுகாப்பு விதியை கட்டாயமாக அமல்படுத்துவதை அடுத்த ஆண்டு அக்டோபர் வரை தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்தார். இந்த விதி அக்டோபர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.

அக்டோபர் 1, 2022 முதல் மேம்பட்ட பாதுகாப்பிற்காக எட்டு இருக்கைகள் கொண்ட அனைத்து வாகனங்களிலும் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்க மத்திய அரசு முன்னதாகத் திட்டமிட்டிருந்தது.

மோதலின் போது டிரைவருக்கும் வாகனத்தின் டேஷ்போர்டிற்கும் இடையே ஏர்பேக் குறுக்கிடுகிறது. இதனால் கடுமையான காயங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆட்டோமொபைல் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் மேக்ரோ எக்கனாமிக் சூழ்நிலையில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சமாக ஏர்பேக்கை கட்டாயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 01, 2023 முதல் பயணிகள் கார்களில் 6 ஏர்பேக்குகள் (எம்-1 வகை) என்று நிதின் கட்கரி இன்று ட்வீட் செய்துள்ளார்.
"மோட்டார் வாகனங்களின் விலை மற்றும் மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அதில் பயணிக்கும் அனைத்து பயணிகளின்  உயிர் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை" என்று அமைச்சர் கூறினார்.

ஆறு ஏர்பேக் விதியை ஒத்திவைக்கும் அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ தனது ட்வீட்டில் "கார்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் இதர செலவு எதுவாக இருந்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே 6  ஏர்பேக் கொண்ட கார்கள் கட்டாயம் அக்டோபர் 2023 முதல் அமலுக்கு வரும். ஆனால் அனைவராலும் இந்த 6 ஏர்பேக்களை விலைகொடுத்து வாங்க முடியாது. மேலும் 'பாதுகாப்புக்கு முன்னுரிமை' என்பதால், கட்காரி அரசாங்கத்தை மானியம் வழங்குமாறு கேட்பாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - ஆளுநர் உரையில் சபாநாயகர் தகவல்
TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - ஆளுநர் உரையில் சபாநாயகர் தகவல்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - ஆளுநர் உரையில் சபாநாயகர் தகவல்
TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - ஆளுநர் உரையில் சபாநாயகர் தகவல்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Embed widget