மேலும் அறிய

2018-2021 ஆண்டு காலத்தில் 45 யானைகள் ரயில் விபத்துகளில் பலி..! மத்திய அரசு தகவல்!

2028-2021 வரையில் 45 யானைகள் ரயில் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தகவல்.

ரயில் தண்டவாளத்தில் சிக்கி, ரயில் மோதி யானைகள் கொல்லப்படுவது காலங்காலமாக நடந்துவரும் பிரச்சினை. பேருயிர்கள் இழப்பிற்கு அரசு இதுவரை ஏந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. 

அந்தவகையில், 2018-2021 ஆண்டு காலத்தில் 45 யானைகள் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மக்களவையில் எழுந்த கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2018-2019-இல் 19 யானைகள், 2019-2020 இல் 14 யானைகள் மற்றும் 2020-2021 -இல் 12 யானைகள் ரயில்களில் அடிபட்டு பலியாகியுள்ளன.

2018-2019 ஆம் ஆண்டில், ஒடிசாவில் ஏழு யானைகளும், மேற்கு வங்காளத்தில் ஆறு  யானைகளும், கர்நாடகா மற்றும் அசாமில் தலா இரண்டு யானைகளும், கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒரு யானையும் பலியாகியுள்ளன என்று அமைச்சர் தாக்கல் செய்த ஆண்டு வாரியான தரவுகள் தெரிவிக்கின்றன.

2019-2020ல் மேற்கு வங்கத்தில் ஐந்து யானைகளும், கேரளாவில் மூன்று யானைகளும், உத்தரகண்ட் மற்றும் அசாமில் மாநிலங்களில் தலா இரண்டு யானைகளும், ஒடிசா மற்றும் ஜார்கண்டில் தலா ஒரு யானையும் ரயில் தண்டவாளத்தில் பலியாகியுள்ளன.

2020-2021 ஆம் ஆண்டில், அசாமில் மொத்தம் 5 யானைகளும், ஒடிசாவில் நான்கு யானைகளும், கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு யானையும் ரயில் தண்டவாளத்தில் கொல்லப்பட்டதாக அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களில் யானைகள் இறப்பதைத் தடுக்க, ரயில்வே அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை  அமைச்சகம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாதவ் கூறினார்.

அமைச்சர் தனது பதிலில் பட்டியலிடப்பட்டுள்ள பல தடுப்பு நடவடிக்கைகளில், அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்கள் மற்றும் வாழ்விடங்களில், ரயில்கள் செல்ல நிரந்தர மற்றும் தற்காலிக வேகக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இடங்களில் யானைகள் நடமாடுவதற்கு சுரங்க பாதை மற்றும் சாய்வுதளங்கள் அமைத்தல்; தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வேலி அமைத்தல், லோகோ பைலட்டுகளை எச்சரிக்கும் விதத்திலான பலகைகள்; மற்றும் ரயில் பணியாளர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் விழிப்புணர்வோடு இருபதற்கான அறிவுறுத்தல் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோறும் பேருயிர்களான யானைகள் ரயில் விபத்துகள், தண்டவாளத்தில் சிக்கி உயிரிழப்பதற்கு, வனத்துறை, அரசு மற்றும் ரயில்வே துறையில் அலட்சிய போக்கே காரணம் என்கின்றனர் சூற்றுச்சூழல் மற்றும் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள்.  அரசு இதற்கென நடவடிக்கை மேற்கொள்வதாக சொல்லப்பட்டாலும், அதற்கான பலன் கண்ணுக்குத் தெரியவில்லையே என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது. அரசுத்துறைகளிடம் இப்படியா அலட்சிய போக்கு தொடரும் வரை யானைகளின் உயிர்கள் பறிபோவதைத் தடுக்க முடியாது. 

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget