மேலும் அறிய

Manipur: மணிப்பூரில் மீண்டும் வன்முறை..ராணுவத்தை குறை சொன்ன பாஜக எம்எல்ஏ..நடந்தது என்ன?

ஏராளமான துணை ராணுவப் படையினர் இருந்த போதிலும், பிற மாவட்டங்களில் இருந்து தீவிரவாதிகள் கிராமத்திற்கு வந்து மூவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வரும் நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை, விஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் தந்தை, மகன் உள்பட அப்பாவி கிராம மக்கள் மூவர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள்:

விஷ்ணுபூர் மாவட்டம் குவாக்டா அருகே உகா தம்பாக் கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் தாக்குதல் நடத்த தொடங்கினர். சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், தந்தை, மகன் ஆகிய இருவரும், பக்கத்து வீட்டில் இருந்த மற்றொரு நபரும் தாக்குதல் நடத்தியவர்களால் கொல்லப்பட்டனர். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "மூவரும் உறங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர், அரிவாளால் அவர்களின் உடலை சரமாரியாக வெட்டியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சுராசந்த்பூரில் இருந்து வந்துள்ளனர். மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு மண்டலத்திற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அத்துமீறி நுழைந்ததால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டிப்பாட்டில் உள்ளது" என தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தை குறை சொன்ன பாஜக எம்எல்ஏ:

இந்த விவகாரத்தில் மத்திய பாதுகாப்பு படையினரை சரிமாரியாக சாடியுள்ள மணிப்பூர் பாஜக எம்எல்ஏ இமோ சிங், "பாதுகாப்பு குளறுபடி காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பணியின் போது அலட்சியமாக செயல்பட்டதற்காக துணை ராணுவப் படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏராளமான துணை ராணுவப் படையினர் இருந்த போதிலும், பிற மாவட்டங்களில் இருந்து தீவிரவாதிகள் கிராமத்திற்கு வந்து மூவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

கிராமத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவப் படை அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். சில பாதுகாப்புப் படைகள் மக்களுக்கும், மாநிலத்துக்கும் இடையே அமைதியின்மையை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சருக்கு (அமித் ஷா) கடிதங்கள் எழுதி வருகிறோம்.

பாதுகாப்புப் படைகளின் சில பிரிவுகள் பிரச்னைகளை உருவாக்குகின்றன. உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படாவிட்டால், மாநிலத்தில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்பாது" என்றார்.

மணிப்பூர் இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குக்கி பழங்குடி சமூக மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாதுகாப்பு படையினர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
Embed widget