மேலும் அறிய

உச்சபட்ச பதவியில் தலித்.. 75 ஆண்டு கால வரலாற்றில் 2ஆவது முறை.. யார் இந்த பி.ஆர். கவாய்?

கேரள மாநிலத்தை சேர்ந்த கே. ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு, இந்திய தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார். தற்போது, தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா, வரும் மே மாதம் 13ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயை அடுத்த தலைமை நீதிபதியாக அவர் பரிந்துரை செய்துள்ளார்.

சுதந்திரத்திற்கு பிறகு, 75 ஆண்டு கால இந்திய வரலாற்றில் 2ஆவது முறையாக நாட்டின் உச்சபட்ச பதவிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய தலைமை நீதிபதி பதவியில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமர உள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த கே. ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு, இந்திய தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார். தற்போது, தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா, வரும் மே மாதம் 13ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயை அடுத்த தலைமை நீதிபதியாக அவர் பரிந்துரை செய்துள்ளார்.

நீதித்துறையின் உச்சபட்ச பதவி:

இந்திய நீதித்துறையை பொறுத்தவரையில், உச்சபட்ச பதவியாக இந்திய தலைமை நீதிபதி பதவி திகழ்கிறது. நாட்டின் நீதிபதிகளிலேயே முதன்மை நீதிபதியாக உள்ள தலைமை நீதிபதிதான், உச்ச நீதிமன்றத்தில் எந்த வழக்கு எந்த அமர்வுக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பார். உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் தலைமை நீதிபதிக்கே உள்ளது.

அரசியலைப்பில் பெரிய கேள்விகள் எழும்போது, சிக்கல்கள் எழும்போது, இதுதொடர்பான வழக்குகளை அரசியலமைப்பு அமர்வுதான் விசாரிக்கின்றன. இந்த வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் எந்த நீதிபதி இருக்க வேண்டும் என்பதையும் தலைமை நீதிபதிதான் தீர்மானிக்கிறார். அதேபோல, வழக்குகளை விசாரிப்பதற்கான அரசியலமைப்பு அமர்வுகளை தன் பதவிக்காலம் முழுவதும் அமைக்காமலும் இருக்கலாம். இதற்கும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது.

இப்படிப்பட்ட முக்கியமான பதவிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் வர உள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு, 75 ஆண்டு கால இந்திய வரலாற்றில் கேரள மாநிலத்தை சேர்ந்த கே. ஜி. பாலகிருஷ்ணன்தான் முதல் தலித் தலைமை நீதிபதி. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளார். 

சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்த குடும்பம்:

இவரை தொடர்ந்து, தற்போது, இந்திய தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த இவர், கடந்த 1985ஆம் ஆண்டு, வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

கடந்த 1987ஆம் ஆண்டு, வரை முன்னாள் அட்வகேட் ஜெனரலும் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியுமான ராஜா எஸ் போன்சலேவுடன் பணியாற்றினார். 1990 க்குப் பிறகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2000 ஆம் ஆண்டு, அரசு வழக்கறிஞரானார். பின்னர், 2003 ஆம் ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியானார்.

16 ஆண்டுகளாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய அவர், கடந்த 2019ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவராக உள்ள அவர், மணிப்பூர் கலவரத்தின்போது அனைத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்தார்.

சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வழக்கறிஞர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர் பி.ஆர். கவாய். இவரது தந்தை ஆர்.எஸ். கவாய், இந்திய குடியரசு கட்சியின் தலைவராக பதவி வகித்திருக்கிறார். கேரளா, பிகார், சிக்கிம் மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கிய அமர்வுகளில் இடம்பெற்றுள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்புக்கு ஒப்புதல் வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்விலும் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்த அமர்விலும் பி.ஆர். கவாய் இடம்பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலப்பை சட்டப்பரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கினார். 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget