மேலும் அறிய

கனமழை பாதிப்பு; பயமுறுத்தும் இடி, மின்னல்: உத்தரப்பிரதேசத்தில் 3 நாட்களில் 23 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 7 ஆம் தேதி மட்டும் அங்கே மின்னல் தாக்கி ஒன்பது பேர் இறந்தனர். இதில் ஃபதேபூரில் மூன்று பேரும் ஹமிர்பூர் மற்றும் பிரயாக்ராஜில் தலா இரண்டு பேரும், ஜலான் மற்றும் பண்டாவில் தலா ஒருவரும் அடங்குவர்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அண்மைக்காலமாகத் தொடர் மழை பொழிந்து வருகிறது. மழை தொடர்பான விபத்துகளில் அக்டோபர் 6 முதல் 8 வரை மட்டும் உத்தரபிரதேசத்தில்  23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த மாநிலத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒன்பது பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 6 அன்று, கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இரண்டு இடங்களில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக நிவாரண ஆணையர் அலுவலகம்  தகவல் வெளியிட்டுள்ளது. கனமழையால் பிரதாப்கர் மற்றும் ரேபரேலியில் தலா ஒருவர் என இருவர் உயிரிழந்துள்ளனர். சீதாபூர் மாவட்டத்தில் மழையின்போது பாம்பு கடித்து மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


கனமழை பாதிப்பு; பயமுறுத்தும் இடி, மின்னல்: உத்தரப்பிரதேசத்தில் 3 நாட்களில் 23 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 7 ஆம் தேதி மட்டும் அங்கே மின்னல் தாக்கி ஒன்பது பேர் இறந்தனர். இதில் ஃபதேபூரில் மூன்று பேரும் ஹமிர்பூர் மற்றும் பிரயாக்ராஜில் தலா இரண்டு பேரும், ஜலான் மற்றும் பண்டாவில் தலா ஒருவரும் அடங்குவர். உயிரிழப்புகள் தவிர்த்து மேலதிகமாக, மின்னல் தாக்கியதில் ஏழு பேர் காயமடைந்தனர். 
இதுதவிர பிரயாக்ராஜில் ஆறு பேர் மற்றும் பண்டாவில் ஒருவரும். லலித்பூரில் 3 பேரும், பல்லியாவில் ஒருவரும் மழைநீர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அமேதி மற்றும் ஷ்ரவஸ்தியில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர். ஃபதேபூரில், ஒருவர் பாம்பு கடித்து இறந்துள்ளார். 


அக்டோபர் 8 ஆம் தேதி, மின்னல் தாக்கியதில் பண்டா பகுதியில் ஒருவர் இறந்தார், கனமழை காரணமாக லக்கிம்பூர், எட்டா மற்றும் அம்பேத்கர் நகரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 9 மற்றும் 10ந் தேதி மாநிலத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.

அக்டோபர் 10ம் தேதி கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 9 முதல் 12-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மாநிலத்தின் சில பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மாவட்ட நீதிபதிகள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று, இழப்புகளின் அளவை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் அல்லது கால்நடைகளை இழந்தவர்களுக்கு அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய நிவாரணப் பணிகளில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Embed widget