மேலும் அறிய

கனமழை பாதிப்பு; பயமுறுத்தும் இடி, மின்னல்: உத்தரப்பிரதேசத்தில் 3 நாட்களில் 23 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 7 ஆம் தேதி மட்டும் அங்கே மின்னல் தாக்கி ஒன்பது பேர் இறந்தனர். இதில் ஃபதேபூரில் மூன்று பேரும் ஹமிர்பூர் மற்றும் பிரயாக்ராஜில் தலா இரண்டு பேரும், ஜலான் மற்றும் பண்டாவில் தலா ஒருவரும் அடங்குவர்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அண்மைக்காலமாகத் தொடர் மழை பொழிந்து வருகிறது. மழை தொடர்பான விபத்துகளில் அக்டோபர் 6 முதல் 8 வரை மட்டும் உத்தரபிரதேசத்தில்  23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த மாநிலத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒன்பது பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 6 அன்று, கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இரண்டு இடங்களில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக நிவாரண ஆணையர் அலுவலகம்  தகவல் வெளியிட்டுள்ளது. கனமழையால் பிரதாப்கர் மற்றும் ரேபரேலியில் தலா ஒருவர் என இருவர் உயிரிழந்துள்ளனர். சீதாபூர் மாவட்டத்தில் மழையின்போது பாம்பு கடித்து மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


கனமழை பாதிப்பு; பயமுறுத்தும் இடி, மின்னல்: உத்தரப்பிரதேசத்தில் 3 நாட்களில் 23 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 7 ஆம் தேதி மட்டும் அங்கே மின்னல் தாக்கி ஒன்பது பேர் இறந்தனர். இதில் ஃபதேபூரில் மூன்று பேரும் ஹமிர்பூர் மற்றும் பிரயாக்ராஜில் தலா இரண்டு பேரும், ஜலான் மற்றும் பண்டாவில் தலா ஒருவரும் அடங்குவர். உயிரிழப்புகள் தவிர்த்து மேலதிகமாக, மின்னல் தாக்கியதில் ஏழு பேர் காயமடைந்தனர். 
இதுதவிர பிரயாக்ராஜில் ஆறு பேர் மற்றும் பண்டாவில் ஒருவரும். லலித்பூரில் 3 பேரும், பல்லியாவில் ஒருவரும் மழைநீர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அமேதி மற்றும் ஷ்ரவஸ்தியில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர். ஃபதேபூரில், ஒருவர் பாம்பு கடித்து இறந்துள்ளார். 


அக்டோபர் 8 ஆம் தேதி, மின்னல் தாக்கியதில் பண்டா பகுதியில் ஒருவர் இறந்தார், கனமழை காரணமாக லக்கிம்பூர், எட்டா மற்றும் அம்பேத்கர் நகரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 9 மற்றும் 10ந் தேதி மாநிலத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.

அக்டோபர் 10ம் தேதி கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 9 முதல் 12-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மாநிலத்தின் சில பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மாவட்ட நீதிபதிகள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று, இழப்புகளின் அளவை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் அல்லது கால்நடைகளை இழந்தவர்களுக்கு அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய நிவாரணப் பணிகளில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget