மேலும் அறிய

Rajasthan Rain: 20 பேரின் உயிரை பறித்த கனமழை, உயிரிழந்த 7 சிறுவர்கள்.. ராஜஸ்தானில் பெரும் சோகம்..

Rajasthan Rain: ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajasthan Rain:  ராஜஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் - 20 பேர் உயிரிழப்பு:

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் கனமழை பாதிப்புகளால், நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக ஜெய்ப்பூர், கரௌலி, சவாய் மாதோபூர், தௌசா ஆகிய இடங்களில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்,  ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் ரூரல், தௌசா, கரௌலி, சவாய் மாதோபூர், கங்காபூர் மற்றும் பரத்பூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின்  சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயிரிழந்தோர் விவரம்:

கனமழைக்கு இதுவரை உயிரிழந்தோர் விவரம், 

  • கனமழைக்கு மத்தியில் ஜெய்ப்பூரில் நிரம்பி வழியும் கனோடா அணையில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தேடுதல் பணி மேற்கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும் ஒருவரது உடல் கூட மீட்கப்படவில்லை
  • பாரத்பூர் மாவட்டம் ஸ்ரீநகர் கிராமம் அருகே உள்ள பங்கங்கா ஆற்றில் மூழ்கி ஏழு சிறுவர்கள் உயிரிழந்தனர்
  • ஜெய்ப்பூர் கிராமத்தின் ஃபாகியில் உள்ள மாஷி ஆற்றின் கரையில் மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டதில் சீதாராம் (21) மற்றும் தேஷ்ராஜ் என்ற இரு இளைஞர்கள் இறந்தனர்.
  • பன்வாரி (25) எனும் நபர் மாதோராஜ்புராவில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தார்
  • சதாம் (32) எனும் நபர் டூடுவில் உள்ள அணைக்கட்டில் விழுந்து இறந்தார்
  • பீவாரைச் சேர்ந்த அசோக்குமார் (23) குளத்தில் தவறி விழுந்து இறந்தார்
  • பக்ரியாவாஸ் பகுதியைச் சேர்ந்த பப்லு (16) எனும் சிறுவன் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தான்
  • கெக்ரி பகுதியில் குல்கான் எனும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்
  • கரௌலியில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்
  • பராபுரா கிராமத்தில் 12 வயது சிறுமி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்
  • பன்ஸ்வாராவில், தௌசாவைச் சேர்ந்த நர்சிங் மாணவர் விகாஸ் சர்மா, கடேலியா நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்தார்

முதலமைச்சர் கோரிக்கை:

இதனிடையே, “மாநில மக்கள் அனைவரும் நீர்நிலைகள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், மழையின் போது மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு இடையே உள்ள தூரத்தை பராமரிக்கவும், மழையின் போது கட்டிடங்களில் கட்டப்பட்ட அடித்தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என முதலமைச்சர் பஜன் லால் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு,  பேரிடர் மேலாண்மை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
Trump Vs Canada: ‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
Embed widget