மேலும் அறிய

Rajasthan Rain: 20 பேரின் உயிரை பறித்த கனமழை, உயிரிழந்த 7 சிறுவர்கள்.. ராஜஸ்தானில் பெரும் சோகம்..

Rajasthan Rain: ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajasthan Rain:  ராஜஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் - 20 பேர் உயிரிழப்பு:

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் கனமழை பாதிப்புகளால், நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக ஜெய்ப்பூர், கரௌலி, சவாய் மாதோபூர், தௌசா ஆகிய இடங்களில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்,  ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் ரூரல், தௌசா, கரௌலி, சவாய் மாதோபூர், கங்காபூர் மற்றும் பரத்பூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின்  சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயிரிழந்தோர் விவரம்:

கனமழைக்கு இதுவரை உயிரிழந்தோர் விவரம், 

  • கனமழைக்கு மத்தியில் ஜெய்ப்பூரில் நிரம்பி வழியும் கனோடா அணையில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தேடுதல் பணி மேற்கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும் ஒருவரது உடல் கூட மீட்கப்படவில்லை
  • பாரத்பூர் மாவட்டம் ஸ்ரீநகர் கிராமம் அருகே உள்ள பங்கங்கா ஆற்றில் மூழ்கி ஏழு சிறுவர்கள் உயிரிழந்தனர்
  • ஜெய்ப்பூர் கிராமத்தின் ஃபாகியில் உள்ள மாஷி ஆற்றின் கரையில் மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டதில் சீதாராம் (21) மற்றும் தேஷ்ராஜ் என்ற இரு இளைஞர்கள் இறந்தனர்.
  • பன்வாரி (25) எனும் நபர் மாதோராஜ்புராவில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தார்
  • சதாம் (32) எனும் நபர் டூடுவில் உள்ள அணைக்கட்டில் விழுந்து இறந்தார்
  • பீவாரைச் சேர்ந்த அசோக்குமார் (23) குளத்தில் தவறி விழுந்து இறந்தார்
  • பக்ரியாவாஸ் பகுதியைச் சேர்ந்த பப்லு (16) எனும் சிறுவன் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தான்
  • கெக்ரி பகுதியில் குல்கான் எனும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்
  • கரௌலியில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்
  • பராபுரா கிராமத்தில் 12 வயது சிறுமி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்
  • பன்ஸ்வாராவில், தௌசாவைச் சேர்ந்த நர்சிங் மாணவர் விகாஸ் சர்மா, கடேலியா நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்தார்

முதலமைச்சர் கோரிக்கை:

இதனிடையே, “மாநில மக்கள் அனைவரும் நீர்நிலைகள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், மழையின் போது மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு இடையே உள்ள தூரத்தை பராமரிக்கவும், மழையின் போது கட்டிடங்களில் கட்டப்பட்ட அடித்தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என முதலமைச்சர் பஜன் லால் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு,  பேரிடர் மேலாண்மை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Embed widget